Skip to main content

9 பேருந்துகளின் கண்ணாடி உடைத்த மர்ம நபர்கள்... சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை!

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Mysterious persons who broke the glass in 9 buses... Police have seized the CCTV footage and are investigating!

 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று மதியம் ஒரு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிரே ஒரு பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 பேர் கல்வீசி பஸ் கண்ணாடியை உடைத்துச் சென்றனர். அதே போல பேராவூரணி டிப்போவிலிருந்து சென்ற 4 பேருந்துகளும் பட்டுக்கோட்டை டிப்போவைச் சேர்ந்த 3 பஸ்கள், புதுக்கோட்டை டெப்போவைச் சேர்ந்த 2 பஸ்கள் என சில மணி நேரத்தில் 2 குழுவாக 2 பைக்குகளில் சென்ற 4 பேர் 9 பஸ்களின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இதில் சில பஸ் ஓட்டுநர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

 

திடீரென சில மணி நேரத்திற்குள் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் பொதுமக்கள் பதறும் விதமாக பஸ் கண்ணாடிகள் உடைத்த சம்பவம் போலிசாரை திணறடித்ததோடு பொதுமக்களை அச்சப்பட வைத்துள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தேடி வருகின்றனர். பைக் முன்னாள் பெட்ரோல் டேங்கில் சாக்கு மூட்டையில் கற்களை அள்ளிக் கொண்டு இருவர் வேகமாக செல்லும் காட்சிகளை போலீசார் கைப்பற்றி வாகன எண்களையும் எடுத்துள்ளனர். அதிராம்பட்டினம் பகுதியிலிருந்தே தாக்குதல்கள் தொடங்கி இருப்பதால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் தஞ்சை மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன சோதனைகளையும் முடுக்கிவிட்டுள்ள நிலையில் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லையில் கைகாட்டியில் வடகாடு போலீசார் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் சோதனை சாவடி அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி பதிவுகள் உள்ளதால் இரு வாகனங்களிலும் கற்களோடு சென்று பஸ்களை உடைத்த மர்ம நபர்களை பிடித்து விடலாம் என்கின்றனர் போலீசார். ஒரே நேரத்தில் இரு கும்பல் 9 பேருந்துகளை உடைத்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.