Skip to main content

“நான் வைத்த கோரிக்கை ஏற்று நெல்லை - சென்னை வந்தே பாரத்” - ஆளுநர் மகிழ்ச்சி 

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட், குஜராத் என 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சியின் வாயிலாக தொடங்கி வைத்தார்.

 

இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று புதிதாக துவங்கப்பட்ட வந்தேபாரத் ரயிலில் நெல்லையில் இருந்து மதுரை வரை பயணம் செய்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

அவர் பதிவிட்டிருப்பதாவது; “தென்தமிழக மக்களுக்காக மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் நேரடியாக நான் வைத்த கோரிக்கையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, காணொளிக் காட்சியின் வாயிலாக தொடங்கி வைத்த திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு இரயில் சேவை தொடக்க விழாவில் கலந்து கொண்டு திருநெல்வேலி இரயில் நிலையத்திலிருந்து மதுரை இரயில் நிலையம் வரை பொதுமக்களோடு இணைந்து பயணம் செய்தேன்.

 

என் சொந்த மாவட்டமான திருநெல்வேலிக்கு வந்தே பாரத் விரைவு இரயில் சேவையை தொடங்கி தென் தமிழக மக்களின் பயணங்களை எளிதாக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒருவர் தவறு செய்தால் ஒட்டுமொத்த துறையையும் குறை கூறுவதா” - ஆளுநர்  தமிழிசை

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

“If one person makes a mistake, blame the whole department” - Governor Tamil Nadu
கோப்புப் படம் 

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இன்று புதுச்சேரியில் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஆளுநர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள், அமலாக்கத்துறை பா.ஜ.க., லஞ்ச ஒழிப்புத்துறை பா.ஜ.க. என திமுகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அப்படியெனில் தமிழக காவல்துறையை திமுக எனக் குறிப்பிடலாமா? தமிழ்நாட்டில் சமீபத்தில் ஒரு அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது. உடனே எல்லா அமைச்சர்கள் வீட்டிற்கும், முதலைமைச்சர் வீட்டிற்கும் சென்று ரெய்டு நடத்துவேன் என்று அதிகாரிகள் கூறினார்களா?

 

அதுபோல்தான் இதுவும், அமலாக்கத்துறையில் ஒரு அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்காக அந்தத் துறையில் இருப்பவர்கள் அனைவருமே லஞ்சம் வாங்குவார்கள். அந்தத் துறையே கறை பிடித்திருக்கிறது என்று எப்படி கூறமுடியும்? அமலாக்கத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறை. இப்படி இருக்கையில், இந்தத் துறையின் அலுவலகத்தில் நாங்கள் ரெய்டு நடத்துவோம் என மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கூறுகிறது எனில், இது தவறான முன்னுதாரணம்” என்று தெரிவித்தார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“நானும் முதலமைச்சரும் அண்ணன் தங்கை போல் இணைந்துள்ளோம்” - ஆளுநர்  தமிழிசை

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Governor Tamilisai said that Me and the Cm narayanasamy are like brother and sister

 

திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தில் தெலுங்கானா மாநில ஆளுநரும் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்திற்கு வருகை தந்து யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து விஜயா ராமநாதன் பாடிய யோகிராம் சுரத்குமார் பக்தி பாடல்கள் ஒலித்தட்டு மற்றும் யோகிராம் சரத்குமார் துதி ஆரம் புத்தகத்தையும் வெளியிட்டார். 

 

இதனைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பாண்டிச்சேரி வளர்ச்சிக்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் நானும் அண்ணன் தங்கையாக பணியாற்றுகிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பாண்டிச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் மாற்றம் குறித்து முதல்வரிடம்தான் கேட்க வேண்டும்.’ பாராளுமன்றத் தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, ‘அருணாச்சலேஸ்வரர் தான் முடிவு எடுக்க வேண்டும்.’ என்றார்.

 

தெலுங்கானாவில் தமிழ் வழிக் கல்வி பள்ளிகள் மூடப்படுவது குறித்த கேள்விக்கு, “அது தவறானது அவ்வாறு நடைபெற்றால் நான்தான் முதலில் எதிர்ப்பு தெரிவிப்பேன், தமிழுக்காக தமிழிசை என்றென்றும் பாடுபடுவேன் குரல் கொடுப்பேன். சனாதனத்தை பற்றி பேசுபவர்களின் குடும்பத்தில் சிலர் ஆன்மீகத்தை கடைப்பிடிக்கிறார்கள், ஒரு பேஷனுக்காக கூறுகிறார்கள். ஆன்மீகத்தை பற்றியும் அதன் அதிசயத்தை பற்றியும் முழுவதுமாக உணர்ந்து இருந்தார்கள் என்றால் அவர்கள் பேசமாட்டார்கள். தன்னைப் பொறுத்தவரையில் நாக்கினால் மட்டும்தான் பேசுகிறார்கள். அவர்களுடைய உள்ளத்தில் ஆன்மீகம் இருக்கிறது. 

 

ஒரு மருத்துவர் தனக்கு உயிர் தெரியவில்லை அதற்காக உயிரே இல்லை என்று சொல்ல முடியுமா. அதேபோல் சனாதனத்தை பற்றி பேசுபவர்களுக்கு இறைவன் தெரியவில்லை என்றால் இறைவனே இல்லை என்று சொல்ல முடியாது” என்றார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்