Skip to main content

"பிளவுபட்ட அ.தி.மு.க.வினரை ஒன்றிணைப்பதே எனது முதல் வேலை"- சசிகலா பேட்டி!

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

 

"My first task is to unite the divided ADMK" says sasikala


அ.தி.மு.க.வின் முதல் எம்.பி.யும், அ.தி.மு.க.வின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தைத் தேர்வு செய்த திண்டுக்கல் மாயத்தேவர் சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (09/08/2022) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 

 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள டி.உச்சப்பட்டியைச் சேர்ந்த பெரிய கருப்பத்தேவர்- பெருமாயி தம்பதியர்களுக்கு அக்டோபர் 15, 1934- ஆம் ஆண்டு பிறந்தவர் மாயத்தேவர். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராக பணியாற்றிய போது எம்.ஜி.ஆர். அ.தி.மு.க வை தொடங்கிய போது திண்டுக்கல்லில் 1973- ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி கண்டார். 

 

அவர் தேர்ந்தெடுத்த இரட்டை இலை சின்னம் இன்று வரை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் அ.தி.மு.க.வின் சின்னமாக உள்ளது. அதன் பின்னர் 1980- ல் தி.மு.க.வில் இணைந்த பிறகும் உதயசூரியன் சின்னத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், வயது முதிர்வின் காரணமாக அரசியலை விட்டு விலகி இருந்தார். அவ்வப்போது அ.தி.மு.க.வில் நடைபெறும் பிரச்சனைகளின்  போது மட்டும் கருத்துக்களைக் கூறிவிட்டு அமைதி காத்து வந்தார்.

 

இந்நிலையில், நேற்று (09/08/2022) மதியம் 12.00 மணியளவில் சின்னாளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். காலமான செய்திக் கேட்டு தி.மு.க.வின் மாநில துணைப் பொதுச்செயலாளரும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவரது இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், அ.தி.மு.க. எடப்பாடி அணியைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன், மாயத்தேவர் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, தேவர் பாதுகாப்பு இயக்கம் உட்பட தேவர் சமுதாய நிர்வாகிகள் தொடர்ச்சியாக, வந்து மாயத்தேவருக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். 

 

அதை தொடர்ந்து, சசிகலா இன்று மதியம் மாயத்தேவர் இல்லத்திற்கு நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது கண்ணீருடன் இருந்த மாயத்தேவர் மனைவி சரஸ்வதியம்மாளை கையை பிடித்து ஆறுதல் கூறிய பின்பு வீட்டின் உள்ளே சென்று சரஸ்வதியம்மாளை அமரவைத்து  நாங்கள் இருக்கிறோம்; கவலைப்படாதீர்கள். தமிழகத்தை ஆண்ட கட்சிக்கு சின்னத்தை தேடி தந்த வெற்றிவீரர் என்று பேசினார். 

"My first task is to unite the divided ADMK" says sasikala

அதன்பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா கூறுகையில், "குக்கிராமத்தில் பிறந்த மாயத்தேவர் சின்னாளபட்டியில் இருந்து பாராளுமன்ற எம்.பி.யாக தேர்வு பெற்று, அ.தி.மு.க. என்ற மிகப்பெரிய கட்சியின் தேர்தல் சின்னத்தைத்தேர்வு செய்த வெற்றி வீரர். அவர் வெற்றி பெற்றதால் தான் இன்றும், இரட்டை இலை அ.தி.மு.க.வின் சின்னமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவர் உயிருடன் இருக்கும்போது நேரில் வந்து பார்க்கலாம் என காத்திருந்த போது சுற்றுப்பயணங்களால் வர முடியவில்லை. நேற்று அவர் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமாக இருந்தது. அ.தி.மு.க. இருக்கும்வரை மாயத்தேவரை மறக்க முடியாது" என்றார். 

 

அப்போது செய்தியாளர்கள் சசிகலாவிடம், எடப்பாடி அணியில் இருந்து முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மட்டும் வந்து பார்த்துள்ளார். மற்றவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை எனக் கேட்டதற்கு, அ.தி.மு.க. என்பது தனிப்பட்ட நபரின் கட்சி அல்ல. ஒன்றரை கோடி தொண்டர்களின் கட்சி. ஏழைகளுக்காக அர்ப்பணித்த கட்சி. நானே வந்திருக்கிறேன்; வேறு என்ன சொல்ல வேண்டும். ஒரு கட்சியின் மூலம் பேரும், புகழும் அடைந்த அவர் நேரில் வந்து பார்த்திருக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்தார். 

 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க. என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிதான் என்று கூறியுள்ளார். அவர்களது கட்சியில் வேண்டுமென்றால் டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செ ல்வம் இணையட்டும் என்கிறாரே என்று கேட்டபோது, அவரது பதிலுக்கு தொண்டர்கள் பதில் அளிப்பார்கள். தொண்டர்கள் முடிவு செய்யும் கட்சி தான் அ.தி.மு.க. வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும். என்னை பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் செய்கின்ற கடமையாக அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பதுதான் என்னுடைய வேலை என்றதோடு, நான் கடந்த 40 வருடங்களாக அரசியலில் உள்ளேன். எல்லா அரசியல் சூழ்நிலையையும் பார்த்துள்ளேன். அ.தி.மு.க. பிளவுபட்டால், அது ஆளுங்கட்சிக்குதான் ஆதாயம் என்று கூறினார்.

"My first task is to unite the divided ADMK" says sasikala

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், சின்னாளப்பட்டி சென்று மாயத்தேவரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து  இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்பு மாயத்தேவர் மனைவி சரஸ்வதியம்மாளிடம், அவர் அ.தி.மு.க.வில் போட்டியிட்ட போது அவரை பார்த்து அரசியலுக்கு வந்தவன் நான். அவருடைய வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளேன். அ.தி.மு.க.வி ற்கு மிகப்பெரிய வெற்றிச் சின்னத்தை தேடிதந்த பெரியவர் அருமை அண்ணன் மாயத்தேவ.ர்  இன்று நம்மை விட்டு பிரிந்தாலும், இந்த உலகம் உள்ளவரை அ.தி.மு.க. கடைக்கோடி தொண்டன் இருக்கும் வரை, அவரது புகழ் நிலைத்திருக்கும் என்றார். 

 

தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்று மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகிறார்கள் என்றால், அதற்கு காரணம் அவரால் கிடைக்கப் பெற்ற இரட்டை இலை சின்னம்தான் என்றார். எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, ஓ.பி.எஸ் இணைய வாய்ப்புள்ளதா? எனக் கேட்டபோது, இன்று அண்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த மட்டும் வந்துள்ளேன். கட்சி நிர்வாகிகளை சந்திக்க தமிழகம் முழுவதும் எனது சுற்றுப்பயணம் தொடங்க இருக்கிறேன் என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.