Skip to main content

கண்ணீருடன் கோரிக்கை வைத்த பொதுமக்கள்... உடனடியாக உதவிய கலெக்டர்

Published on 25/11/2020 | Edited on 25/11/2020
ddd

 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை ஓரபகுதியான கோட்டக்குப்பம் மரக்காணம் பகுதிகளில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் நிவர் புயலினால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை இந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகள் குறித்து நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

 

அப்போது அவர் பொதுமக்களிடம், நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் இப்பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக 12 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அந்த பாதுகாப்பு மையங்களுக்குச் சென்று தங்கிக்கொள்ளலாம். அங்கு உணவு, மின்சார வசதி, குடிநீர் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

 

ddd

 

இது மட்டுமில்லாமல் கடற்கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அரசு பள்ளிகள் திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். எனவே புயலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மீனவர்கள் பொதுமக்கள் ஆகியோர் தேவையின்றி வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்களுக்கு உதவி தேவை என்றால் பாதுகாப்பு படையினரை உடனே தொடர்பு கொள்ளலாம் .அதற்கான தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

மேலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் பணியாளர்கள் அந்தந்த கிராமங்களிலேயே தங்கியிருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் அவசர உதவி தேவை என்றால் தொடர்புகொண்டு கேட்கலாம். இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்பதை மீனவ மக்களிடம் எடுத்துக் கூறினார் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை.

 

மாவட்ட ஆட்சியர் ஆய்வு பணிகளுக்காக சென்றுகொண்டிருந்தபோது மரக்காணம் அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த 50 குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் எங்கள் கிராமம் கடற்கரையை ஒட்டி உள்ளது புயல் தாக்கினால் நாங்கள் பாதிக்கப்படுவோம். எனவே எங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உடனே மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அப்பகுதி மக்கள் வாழும் இடத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டதோடு, அனைத்து உதவிகளையும் அந்த மக்களுக்கு உடனுக்குடன் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிட்டார். கடற்கரையோர மாவட்டங்களான கடலூர் விழுப்புரம் மயிலாடுதுறை நாகை உட்பட பல மாவட்ட ஆட்சியர்கள் நிவர்புயல் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் குறைவு; ஆட்சியரின் உத்தரவால் பரபரப்பு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Nutrient organizer suspended due to shortage of eggs in student rations

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

“புயல் பாதிப்பின்போது எதிர்க்கட்சி தலைவர் சேலத்தில் இருந்தார்” - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
TN Govt is a pioneer in dealing with the storm disaster says Minister Thangam Thennarasu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். 

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை பாதிப்பு, நெற்பயிர் பாதிப்பு, வீடுகள் பாதிப்பு எனப் பாதிப்புகளுக்கு ஏற்றார்போல் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தக்கம் தென்னரசு, “புயல் பேரிடரை எதிர்கொண்டதில் தமிழக அரசு முன்னோடியாக உள்ளது. வெள்ள மீட்புப் பணிக்கு முதல்வரே நேரில் சென்ற நிலையில், எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்கிறது. அமைச்சர்கள் தொடர்ந்து மழை, மீட்புப் பணியில் களப்பணியாற்றி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா படத்துடன் நிவாரணம் வழங்கிய நிலையில், தற்போது அப்படி செய்யாமல் எந்த படமும் இன்றி உடனுக்குடன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. புயல் பாதிப்பு ஏற்பட்டபோது எதிர்க்கட்சி தலைவர் சேலத்தில் இருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு புயலின் போது அதிமுக அரசு ரூ. 5000 வழங்கியது; திமுக அரசோ ரூ. 6000 வழங்குகிறது. நிவாரண தொகைக்கான டோக்கன் வரும் 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும். நாளை வரும் மத்தியக் குழுவிடம் நிதி உதவி குறித்து கோரிக்கை வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.