Skip to main content

“தமிழில் கையெழுத்திட வேண்டும்” - பள்ளிக் கல்வித்துறை அதிரடி

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

Must sign in Tamil School Education Department 

 

தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சார்பில், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பணியாற்றி வரும் அனைத்து இயக்குநர்கள், சென்னை பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர்கள், அனைத்து  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

 

அதில், “பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அனைத்து இடங்களிலும் தங்களின் பெயர்களை எழுதும் போதும், கையெழுத்திடும் போதும் கண்டிப்பாகத் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று மீண்டும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனக் கடந்த 2021  ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையைக் குறிப்பிட்டுப் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். இந்த உத்தரவைப் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பணியாற்றுபவர்கள் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை அனைத்து இடங்களிலும் பெயரையும், கையொப்பத்தையும் தமிழிலேயே இட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Tamil should be made the language of High Court proceedings Anbumani

 

சென்னை உயர்நீதிமன்ற வளாக நுழைவாயில் அருகில் பாமக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ் மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

 

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தினால் மட்டும் போதாது. இது பற்றி பேசினால் போதாது. தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குவதில் என்ன பிரச்சனை இருக்கிறது. நேற்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியாற்ற வந்துள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங், நான் விரைவில் தமிழை கற்றுக்கொள்வேன். தாய் மொழியில் வழக்கறிஞர்கள் வாதத்தை முன் வைத்தால் உணர்வுப்பூர்வமாக இருப்பதுடன், உண்மைப்பூர்வமாகவும் இருக்கும் என்று சொன்னார். நீதிபதி சிவஞானம் என்பவர் தமிழில் பதவியேற்ற முதல் நீதிபதி ஆவார்.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் ஒரு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். தமிழ் மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்ற இரு தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும். கடந்த 2006 ஆம் ஆண்டு கலைஞர் கொண்டு வந்த தீர்மானத்தை, அன்றைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபிஷா அதை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அதோடு அவர் 12 ஆலோசனைகளையும் கொடுத்தார்” எனத் தெரிவித்தார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Half Yearly Exam Date Notification for School Students
கோப்புப்படம்

 

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகம் முழுவதும் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு ஒரே மாதிரியான தேர்வாக நடைபெற உள்ளது.

 

11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21 ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்