Skip to main content

மருமகளை கொடூரமாகக் கொன்ற தாய்; வேடிக்கை பார்த்த மகன்

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

Mother-in-law and husband arrested in daughter-in-law passed away case
செல்வி

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகில் உள்ள டி. குளத்தூர்  என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் சின்னதம்பி நடியம்மாள் தம்பதிகள். இவர்களது மகள் முப்பது வயது செல்விக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள அயன் குஞ்சரம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

 

இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். ராமகிருஷ்ணன் தனது தந்தை கல்வராயன் தாயார் நாகக்கன்னி ஆகியோருடன் வசித்து வரும் நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் மாமனார் கல்வராயன் கடந்த மாதம் ஆறாம் தேதி அயன் குஞ்சரம் கிராமத்தில் உயிரிழந்துள்ளார். அவரது இறப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக செல்வி மாமனார் வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிறார்.

 

இந்த நிலையில் நேற்று முன் தினம் செல்வி திடீரென இறந்து போனதாக அவரது பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வியின் பெற்றோர் விரைந்து வந்து மகளின் உடலைப் பார்த்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் செல்வியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இறந்துபோன செல்வியின் கழுத்தில் காயங்கள் உள்ளன. இதனால் அவரது மரணத்தில் சந்தேகத்திற்கிடமாக உள்ளதால் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் அவரது கணவர் ராமகிருஷ்ணன், மாமியார் நாகக்கன்னி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

 

அதில், மாமியாரே மருமகளை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார் என்ற விவரம் மேற்படி வழக்கில் தற்போது தெரிய வந்துள்ளது. ராமகிருஷ்ணனுக்கும் அவரது மனைவி செல்விக்கும் விவாகரத்து வழக்கு நடந்தபோது, மாமனார் கல்வராயனை பலர் முன்னிலையில் செல்வி திட்டி உள்ளார். இதைப் பார்த்த மாமியார் நாகக்கன்னிக்கு அப்போது கடும் கோபம் ஏற்பட்டது. இந்நிலையில் கல்வராயன் இறந்த துக்க நிகழ்விற்காக மாமியார் வீட்டுக்கு வந்து தங்கியிருந்த செல்விக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்ட மாமியார் நாகக்கன்னி மகன் ராமகிருஷ்ணன் உதவியுடன் செல்வி வலிப்பில் துடிக்கும்போது அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக நாகக்கன்னி ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மாமியார் நாகக்கன்னி கொலைக்கு உடந்தையாக இருந்த செல்வியின் கணவர் ராமகிருஷ்ணன்  இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். வலிப்பு நோயால் துடித்த பெண்ணை இரக்கமற்ற முறையில் மாமியாரே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.