Skip to main content

‘பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்திச்சென்றாயே...’ - தாயின் சடலத்தின் மீது மரணித்த மகள்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

mother and daughter passed away same day
தாய் - மகள்

 

‘அம்மா, உனக்கு கடைசிக்காலம் வரை தினமும் ஒரு வேளை சாப்பாட்டை என் கையால்தான் ஊட்டி விடுவேன்’ என்ற மகளின் அளவு கடந்த பாசத்தால், 31 ஆண்டுகளாக தன் மகளின் கையால்  சாப்பிட்டு வந்த தாய் திடீரென்று இறந்ததால், இறந்த தாயின் மாா்பில் விழுந்து தன் உயிரையும் மகள் மாய்த்துக்கொண்ட சம்பவம் குமாியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே காற்றாடிமுக்கு பகுதியைச் சோ்ந்த நடேசன் மனைவி வேலம்மாள் (78) ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிாியை. இவா்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். ஒரே பெண் பிள்ளையான பகவதியம்மாளை (56) சிறு வயதில் இருந்தே தாயாா் வேலம்மாள் மிகுந்தப் பாசத்துடன் வளர்த்து வந்தார். அதே போல், மகள் பகவதியம்மாளும் வளர, வளர தாயார் மீது பிாியமாகவே இருந்து வந்தார்.

 

பகவதியம்மாளுக்கு திருமண வரன் பாா்த்தபோது கூட, தினமும் என் தாயாரை நான் பாா்க்க வேண்டும். அதற்கு வசதியாக வீட்டின் அருகில் வரன் பாருங்கள் என பகவதியம்மாள் கூறியதையடுத்து, வீட்டில் இருந்து 5 கி.மீ தூரத்தில் தலக்குளம் பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு மணம் முடித்து வைத்தனா். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

 

பகவதியம்மாளுக்கு திருமணம் முடிந்த அடுத்த வாரத்திலிருந்தே, தனது வீட்டிலிருந்து தாயாருக்கு தினம் ஓரு வேளை, காலை அல்லது மதிய சாப்பாட்டை கொண்டு போய் அவரே ஊட்டி விட்டு வந்தார். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் கூட ஆச்சரியப்பட்டுள்ளனா். கணவன் வீட்டிலும் இதற்கு எந்த எதிா்ப்பும் காட்டவில்லை. அந்தளவு தாயும் மகளும் பாசத்தோடு இருப்பதை உறவினா்களும் ஊராரும் பெருமையோடு பேசி வந்தனா்.

 

இந்த சூழ்நிலையில் தான் வேலம்மாளுக்கு சில நாட்களாக உடல்நிலை சாியில்லாமல் இருந்தது. கடந்த 24 ஆம் தேதி மதியம், பகவதியம்மாள் தாயாருக்கு உணவு கொடுத்து விட்டு வீட்டிற்குச் சென்றாா். மறுநாள் 25 ஆம் தேதி காலை, தாயாருக்கு டிபன் கொடுக்க தயாா் செய்து கொண்டிருந்த போது, அவாின் சகோதரா் போன் செய்து அம்மா இறந்துவிட்டார் எனக் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பகவதியம்மாள், உடனே தாயாரைப் பார்க்கச் சென்றார்.

 

தாயாாின் உடலைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தவரை உறவினர்கள் ஒருபுறம் தேற்றிக்கொண்டிருந்தனா். இந்நிலையில், திடீரென்று பகவதியம்மாள் தாயாாின் மாா்பில் விழுந்து பேச்சு மூச்சின்றி கிடந்தாா். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினா்கள் பகவதியம்மாளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

 

திருமணத்துக்கு முன்பே பிள்ளைகள் பெற்றோரை வெறுக்கும்  இந்த காலக்கட்டத்தில் திருமணம் முடிந்தும் கடைசி வரை தாய், மகள் பாசத்துக்கு கொஞ்சமும் குறை இல்லாமல் வாழ்ந்த வேலம்மாளும் பகவதியம்மாளும் தாய், மகள் பாசத்துக்கு இந்தக் காலத்தின் உதாரணமாகிவிட்டனா் என்கின்றனா் ஊராா்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.