Skip to main content

காலையில் கல்லூரி மாணவி... மாலையில் திருடி... சென்னையை அதிரவைத்த இளம்பெண்!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

சென்னையில் சமீப காலமாக மின்சார ரயில்களில் சென்னையில் ஒரு பிரபல தனியார் கல்லூரியில் படித்து வந்த இளம்பெண் பயணிகளிடம் திருடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மின்சார ரயில்களில் பெண்கள் பயணிக்கும் பெட்டியில் திருடு போவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. குறிப்பாக வேலைக்கு போக மின்சார ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளிடம் இருந்து கைப்பைகள்,நகைகள், மொபைல் போன் மற்றும் பணம் திருடப்பட்டு வந்துள்ளது. இதனால் பொருட்களை பறிகொடுத்த பெண் பயணிகள் இது குறித்த புகார்களை எழும்பூர் மற்றும் மாம்பலம் காவல் நிலையங்களில் கொடுத்து வந்துள்ளனர். தொடர்ந்து திருட்டு அதிகமாக நடந்து வந்ததால் மாறுவேடத்தில் மாம்பலம் காவல்துறையினர் ரயில் பெட்டிகளில் சில நாட்களாக கண்காணித்து வந்துள்ளனர். இதனையடுத்து தினமும் சந்தேகம் எழும் வகையில் ஒரு இளம்பெண் ரயிலில் பயணித்து வருவதை கண்டுபிடித்துள்ளனர். 
 

train



இந்த நிலையில் சந்தேகத்துக்கு உரிய இளம்பெண்ணை காவல்துறையினர் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸார் விசாரணையின் போது அந்த பெண்ணின் பெயர் மோகனப்பிரியா என்பதும், அவர் பிரபல தனியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வரும் மாணவி என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் போலீஸாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதில் அந்த இளம்பெண் மோகனப்பிரியா, நான் தான் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து காவல்துறையினர் 4 கிராம் தங்க நகைகள், பல 500 ரூபாய் நோட்டுகள், மற்றும் சில கைப்பைகளை பறிமுதல் செய்துள்ளனர். பின்பு இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோகனப்பிரியாவை சிறையில் அடைத்துள்ளனர். கல்லூரி மாணவி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது மாம்பலம் காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.