Skip to main content

மயங்கி விழுந்த 150 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்-ஓசூரில் பரபரப்பு

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

More than 150 school students who fainted-Hozur riot

 


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநகராட்சியில் உள்ள காமராஜர் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 1,300 மாணவர்கள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மதிய உணவு இடைவெளிக்கு பிறகு ஒரு விதமான விஷவாயு துர்நாற்றத்துடன் வந்ததை அடுத்து ஆறு மற்றும் ஏழாம் வகுப்பிலிருந்த மாணவர்கள் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தனர். சில மாணவர்கள் வாந்தி எடுத்தனர்.

 

இதனையடுத்து அதிர்ந்த பள்ளி ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்த நிலையில், மாணவர்கள் அனைவரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் சில மாணவர்களுக்கு பள்ளிக்கு அருகில் உள்ள மைதானத்தில் ஆம்புலன்ஸில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கும் மாணவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தச் சம்பவம் காரணமாகப் பகுதியில் பெற்றோர்களும், பொதுமக்களும் அதிக அளவில் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவத்துறை என அனைத்து துறையினரும் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட ஆய்வில் கழிவறையின் செப்டிக் டேங்க் வெடித்து விஷயவாயு தாக்கி இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. மாணவர்கள் மயங்கி விழுவதற்கு இதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.