Skip to main content

10க்கும் மேற்பட்ட முதலமைச்சர் வேட்பாளர்கள்: திருநாவுக்கரசர்

Published on 15/03/2018 | Edited on 15/03/2018


 

cm seat.jpg



நெல்லை மாவட்டம் களக்காடு அருகே செய்தியாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர்.
 

அப்போது அவர் கூறுகையில், 
 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் என்பது இல்லை. வெற்றிடம் இருந்தால் இயற்கையாக காற்று தானாக நிரப்பி விடும். ரஜினி, கமல், விஜயகாந்த், டிடிவி தினகரன், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் உள்பட 10க்கும் மேற்பட்ட முதலமைச்சர் வேட்பாளர்கள் உள்ளனர். காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் தொண்டர்களின் இலக்கு, நோக்கம் ஆகும். ஆனால் இந்த தேர்தலில் இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் காமராஜர் ஆட்சி அமையும். தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும். 

 

Thirunavukarasar


 

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க. 3 அணியாக உடைந்தது, அதில் எடப்பாடி பழனிச்சாமி அணியையும், பன்னீர் செல்வம் அணியையும் பிரதமர் மோடி பஞ்சாயத்து செய்து இணைத்து வைத்துள்ளார். ஆனால் அவர்கள் இணைந்தாலும் இருவர்களுக்கிடையேயும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதுபோல மக்களிடம் கருத்து கேட்டோ, அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்து கேட்டோ எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்கவில்லை. கோர்ட்டு தீர்ப்பு வந்ததும் அதிமுக ஆட்சி தானாக கலைந்து விடும். 
 

தமிழகத்தில் முதலமைச்சர் ஆகும் கனவுடன் பலர் கட்சி துவங்குகின்றனர். ரஜினி, கமல், வரிசையில் தற்போது டிடிவி தினகரன் புதிய கட்சி தொடங்குகிறார். அவருக்கு எனது வாழ்த்து. கமல்ஹாசன் பா.ஜ.வுடன் இணையும் வாய்ப்பு இல்லை. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்று அவருக்காக மக்கள் ஓட்டு போடவில்லை. ஜெயலலிதாவிற்காகதான் ஓட்டு போட்டனர். இவ்வாறு கூறினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
heat exposure; Samiana pandal at polling centers

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுசேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குச் சாவடிகளைத் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பாதுகாப்பு வசதி சரியான நிலையில் கதவு, ஜன்னல் மின்சார வசதி, ஃபேன், வாக்காளர் வந்து செல்ல வழிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், குடிநீர் மர நிழல், அல்லது கான்கிரீட் தள நிழல், கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.  

இந்தநிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் நிழல் தரும் மரங்கள் அல்லது கட்டிட நிழல் உள்ள வாக்குச்சாவடிகள் தவிர இதர வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வசதிக்காக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எத்தனை வாக்குச் சாவடிகளுக்கு சாமியான பந்தல் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் பிறகு சாமியானா பந்தல் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

கெஜ்ரிவாலை பதவி நீக்கக் கோரும் மனு; உயர் நீதிமன்றம் அதிரடி! 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Petition seeking impeachment of Kejriwal; High Court action

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே அரவிந்த் ஜெஜ்ரிவாலை டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்னு குப்தா என்பவர் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.