Skip to main content

பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

money incident in kallakurichi

 

கள்ளக்குறிச்சி  நகரில் தியாகதுருகம் சாலையில் வசிப்பவர் மணி. இவருடைய மனைவி அருட்செல்வி. அருட்செல்வி விழுப்புரம் குற்றப் பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார்.

 

அந்தப் புகாரில், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு என்னுடைய வீட்டிற்கு வந்தார். அதே பகுதியில் அவர் வசித்ததால் ஏற்கனவே செந்திலுடன் எனக்கு அறிமுகம் இருந்தது. நட்புரீதியாக எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவர் செந்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த மெடிக்கல் கடை உரிமையாளர் ஜாகீர் என்கிற தீன்பாய் மற்றும் நெல்லை மாவட்டம் பெருமாள்பட்டியைச் சேர்ந்த முருகன் ஆகியோருடன் சேர்ந்து பெரிய அளவில் ராசிக்கல் மற்றும் வைர வியாபாரம் செய்து வருவதாகவும், அதன் மூலம் பல கோடி ரூபாய் பணம் சம்பாதித்து வருவதாகவும் கூறினார்.

 

தற்போது அந்தத் தொழிலில் அதிக அளவில் பணம் முதலீடு செய்து உள்ளதால், தொழிலுக்குத் தற்போது பணத்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே நீங்கள் உதவி செய்தால், நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு இரட்டிப்பு மடங்கு பணத்தைத் திருப்பித் தருவேன் என்று செந்தில் உறுதி கூறினார். செந்தில் வார்த்தையை நம்பி, நான் ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்தேன். ஆனால், நாட்கள் சென்றதே தவிர பணத்தை இரட்டிப்பாக்கியும் தரவில்லை, கொடுத்த அசல் பணத்தையும் திருப்பித் தரவில்லை.

 

செந்தில் என்னை ஏமாற்றி வருகிறார். அவர் மீது நம்பிக்கை வைத்துப் பணத்தைக் கொடுத்தேன். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனக்குப் பணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அருட்செல்வி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இவரது புகாரையடுத்து விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் மேற்படி குற்றம்சாட்டப்பட்ட மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, ஜாகீர் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள செந்திலை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இளம்பெண்ணிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி கோடிக் கணக்கில், பணத்தை மோசடி செய்த மூவரின் செயல் வெளியுலகத்திற்குத் தெரியவந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.