Skip to main content

தயாநிதி மாறனிடம் பணம் சுருட்டல்; வங்கி நிர்வாகம் விளக்கம்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

money for Dayanidhi Maran issue Bank Management Explanation

 

திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் உறுப்பினரும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன். திமுகவின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான இவர், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இவரது மனைவி பிரியா தயாநிதி மாறன். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது, தயாநிதி மாறன் சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வரும் நிலையில் அவரது மனைவி பிரியா மற்றும் பிள்ளைகள் கடந்த வாரத்தில் மலேசியாவில் இருந்துள்ளனர்.

 

இதற்கிடையில் தயாநிதி மாறனும் மலேசியாவில் இருக்கும் அவரது மனைவியும் ஜாயின்ட் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த அக்கவுண்ட்டை சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் ஆக்ஸிஸ் வங்கியில் சேமிப்பு கணக்காக வைத்துள்ளனர். மேலும், தயாநிதி மாறனின் மொபைல் நம்பர் தான் அந்த வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் நம்பராக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில், கடந்த 8 ஆம் தேதி மாலை 4 மணியளவில் மலேசியாவில் இருக்கும் தயாநிதி மாறனின் மனைவிக்கு அடையாளம் தெரியாத செல்போன் நம்பர்களில் இருந்து மூன்று தடவை அழைப்பு வந்திருக்கிறது.

 

அப்போது, அந்த காலில் இந்தியில் பேசிய மர்ம நபர்கள், தாங்கள் ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து, உங்களுடைய கணக்கில் இருந்து ரூபாய் 99 ஆயிரத்திற்கு பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், வங்கி ஊழியர் போல பேசி ஏடிஎம் கார்டு எண்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை விபரங்களை கேட்டுள்ளனர். இதனிடையே, சுதாரித்துக்கொண்ட தயாநிதி மாறனின் மனைவி எந்தவித ஓடிபி நம்பரையும் ஷேர் செய்யாமல் அந்த அழைப்பை துண்டித்துள்ளார். இதற்கிடையில், சிறிது நேரம் கழித்து தயாநிதி மாறனின் செல்போன் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில், வங்கிக் கணக்கிலிருந்து 99 ஆயிரத்து 999 ரூபாய் ஒரே தடவையாக எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தயாநிதி மாறன், உடனடியாகத் தனது வாங்கிக் கணக்கின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளார். பின்னர், அடுத்தநாள் இந்த நூதன மோசடி சம்பவம் குறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த புகாரில், தனக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்ததாகவும், அதன்பின் தனது வங்கிக் கணக்கிலிருந்து 99 ஆயிரத்து 999 ரூபாய் திருடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது வங்கிக் கணக்கில் பணத்தை திருடிய சைபர் மோசடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்கும்படி தெரிவித்திருந்தார்.

 

money for Dayanidhi Maran issue Bank Management Explanation

 

அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், அதை சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பி வைத்தார். அதன்பிறகு, இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதுதொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதனிடையே, போலீஸ் விசாரணையில் பணத்தை திருடிய கும்பல் இந்தி மொழியில் பேசியதை அடுத்து, அவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த மோசடி கும்பல் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மோசடி செய்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் இழந்த தொகையினை மீட்பதற்கும் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இதுபோன்ற ஆன்லைன் வங்கி மோசடிகளிலிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏதேனும் புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் 1930 என்ற சைபர் கிரைம் உதவி மைய எண்ணை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இத்தகைய சூழலில், வங்கி விவரங்கள், ஓ.டி.பி. எண் எதையும் பகிராமல் தனது வங்கிக் கணக்கில் பணம் திருடப்பட்டது குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். இந்தியாவில் நடந்த சைபர் கிரைம்களில் 75 சதவீதம் நிதி மோசடிக்கானவை என செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே ஆதார் தகவல்கள் விற்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? எனக் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் திரும்ப கிடைத்துவிட்டதாக ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் சார்பில் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவை மேற்கோள்காட்டி ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள பதிவில், “வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம் கண்டறியப்பட்டு, வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் பிரிவு விசாரணைக்காக புகார் செய்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.