Skip to main content

முழு ஊரடங்கு; ஜன.9- ல் நடைபெறவிருந்த மொய் விருந்துகள் ரத்து!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

Moi parties scheduled to be held on Jan. 9 due to full lockdown cancelled!

 

புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியான ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் தெற்கு பகுதியான பேராவூரணி தொகுதி உள்பட பல பகுதிகளில் பிரபலமடைந்த விழா மொய் விருந்துகள்.

 

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்காக ஆனி, ஆடி, ஆவணி மாதங்களையே பயன்படுத்தி வந்தனர். ஆனால் கஜா புயல் தொடங்கி கரோனா பரவல் என அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளால் மொய் விருந்து காலங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

 

முறையாக மொய் விருந்துகள் நடந்தால் சுமார் ரூபாய் ஆயிரம் கோடிகள் வரை பணம் புழக்கத்திற்கு வந்து போனது. காய்கறி, ஆட்டுக்கறி, அரிசி, மளிகை, விறகு, மொய் நோட்டு, பேனாக்கள் என பல தொழில் செய்வோரும் அச்சகம், சமையலர்கள் என பலரது வாழ்வாதாரங்களும் அடங்கி இருந்தது. ஆனால் கரோனா ஊரடங்கால் அத்தனையும் முடங்கிப் போனது.

 

கடந்த சில வருடங்களாக பருவம் தப்பிய மொய் விருந்துகளால் வசூல் குறைவு என்றாலும், கூட வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க ஆனி, ஆடி, ஆவணி என்ற மொய் விருந்து பருவ காலம் மாறி தளர்வு உள்ள மாதங்களை பயன்படுத்தி மொய் விருந்துகள் நடத்தப்பட்டது.

 

அதேபோலதான் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்கழி மாதம் என்றும் பார்க்காமல் மொய் விருந்துகள் தொடங்கியிருந்தது. வரும் ஜனவரி 9- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கீரமங்கலம், கொத்தமங்கலம், பெரியாளூர், வடகாடு, கீழாத்தூர் என பல கிராமங்களிலும் சுமார் 60 பேர் இணைந்து மொய்விருந்து அழைப்பிதழ்கள் அச்சடித்து கொடுத்துவிட்டு மளிகை பொருள் வாங்கி வைத்திருக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு விழாக் குழுவினருக்கு பேரிடியாக விழுந்துள்ளது.

 

இந்த ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மொய் விருந்துகளை ரத்து செய்துள்ளனர் விழாக் குழுவினர். அடுத்த சில நாட்களில் மொய் விருந்தை நடத்த விழாக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

 

மொய் விருந்தை ரத்து செய்துள்ள சிலர் கூறும் போது, "கிடைக்கும் இடங்களில் வட்டிக்கு கடன் வாங்கி சிறு சேமிப்பு போல பலருக்கு மொய் செய்து, அதனை அறுவடை செய்ய நாள் குறித்து ஊருக்கெல்லாம் அழைப்பிதழ் கொடுத்து விட்டு காத்திருக்கும் நேரத்தில் அரசின் அறிவிப்பால் தற்போது வரை வாங்கியுள்ள கடனை எப்படி திருப்பிக் கொடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது" என்கின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.