Skip to main content

''11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு மோடியின் பொங்கல் பரிசு!''-எல்.முருகன் பேட்டி!

Published on 14/01/2022 | Edited on 14/01/2022

 

'' Modi's Pongal gift to 11 medical colleges in Tamil Nadu! '' - L. Murugan interview!

 

சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள தமிழாய்வு நிறுவனத்தின் புதிய வளாகம் மற்றும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை கடந்த ஜனவரி 12- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் திறந்துவைத்தார்.

 

தமிழ்நாட்டில் விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகை, திண்டுக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூபாய் 4,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நிலையில் இந்த 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி  ஜனவரி 12- ஆம் தேதி மாலை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

 

'' Modi's Pongal gift to 11 medical colleges in Tamil Nadu! '' - L. Murugan interview!

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன், ''தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் தமிழகத்திற்கு பொங்கல் பரிசு கொடுத்திருக்கிறார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடந்து வருகிறது. தமிழ் இலக்கியம், தமிழகம் மீது பிரதமர் மோடி அதிக பற்று வைத்து உள்ளார் என தெரிவித்துள்ளார்.

 

'' Modi's Pongal gift to 11 medical colleges in Tamil Nadu! '' - L. Murugan interview!

 

அதேபோல் மருத்துவக் கல்லூரி திறப்பு விவகாரத்தில் சாதனை படைத்த அதிமுகவை குறை கூறுவது கண்டிக்கத்தக்கது என தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார், '2011 ஆம் ஆண்டு ஆட்சியை விட்டு விலகும் தருவாயில் மக்களை ஏமாற்ற அரசாணை வெளியிட்டு சாதனை எனக் கூறுவதா? என திமுகவிற்கு கேள்வி எழுப்பியுள்ள, அவர் மருத்துவத்துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது என்றால் அதற்கு அதிமுகதான் காரணம்' எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.