Skip to main content

"மனம் கனக்கிறது" - திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்...

Published on 26/10/2019 | Edited on 26/10/2019

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி 17 மணிநேரமாக தொடர்கிறது.

MK Stalin tweets


குழந்தை சுர்ஜித்திற்கு தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சுர்ஜித்தின் மேல் சரிந்திருக்கும் மணலை விலக்கி சிறுவனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் சிறுவன் ஆழ்துளாய் கிணற்றில் விழுந்தது குறித்து ட்வீட் செய்துள்ளார்.  “மனம் கனக்கிறது! குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம். அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி  வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்