பெரியாரின் 142வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனைகளை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதமாக, திராவிடப் பள்ளியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
பெரியாரின் பிறந்தநாளையொட்டி, திராவிட இயக்க சாதனைகளைக் கற்பிக்கும் முயற்சியாக திராவிடப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. திராவிடப் பள்ளி மூலம் திராவிட இயக்கத்தின் வரலாறு, கோட்பாடுகள், சாதனைகள் ஆகியவை இணையம் மற்றும் அஞ்சல் வழியாக மாணவர்களுக்குக் கற்றுத்தர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த விழாவில், தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, கடலூர் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.