Skip to main content

எய்ட்ஸ் குறித்த தவறான புரிதல்! சிறுமிகளோடு ‘பழகிய’ கணேசன்! -விழி மூடிக் கிடக்கும் விருதுநகர் மாவட்டம்!

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ளது ரங்கபாளையம். இங்கு அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுவன் ஒருவனுக்கும், சிறுமிகள் இருவருக்கும், தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துவந்த வெள்ளைச்சாமி, திருவன், இரணியவீரன், கணேசன், ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்து, தற்போது அவர்கள் கம்பி எண்ணுகின்றனர்.

 

Misunderstanding of AIDS! Ganesan used little girls! Virudhunagar district in unawareness

 

உரிய மருத்துவ சோதனை மேற்கொள்ளாமல் அவசரகதியில் மேற்கண்ட ஐவர் மீதும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. காரணம் – அந்த 5 பேரில் ஒருவரான கணேசன்,  எச்.ஐ.வி. தொற்றுள்ளவர் என்றும் அவரது மனைவி நிறைமதியும்கூட எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர் என்பதும் தெரியவந்திருக்கிறது.

2019 மார்ச் மாதமே, கணேசனுக்கும் நிறைமதிக்கும் எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டு,  எய்ட்ஸ் கட்டுப்பாடு மையம் மருத்துவ உதவிகளைச் செய்துள்ளது. ஆனாலும், இவ்விருவரையும் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க அம்மையம் தவறிவிட்டது. இதைத் தனக்கு சாதமாக்கிக்கொண்ட கணேசன், சிறுமிகளை வேட்டையாடியிருக்கிறான்.

 

Misunderstanding of AIDS! Ganesan used little girls! Virudhunagar district in unawareness


கணேசனின் இக்கொடுஞ்செயலுக்கு எய்ட்ஸ் குறித்த தவறான நம்பிக்கையும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்காவிலுள்ள சஹாரா பாலைவனத்திற்கு தெற்கிலுள்ள நாடுகள், இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில்,  எய்ட்ஸ் குறித்த தவறான புரிதல்கள் உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அது என்னவென்றால், கன்னித்தன்மை உள்ள இளம் பெண்களிடம், சிறுமியரிடமும் உறவு வைத்துக்கொண்டால், எய்ட்ஸ் குணமாகிவிடும் என்பதே. அதனால்தான், ‘மருந்து,  மாத்திரைகள் சரிப்பட்டு வராது.. உயிர் வாழவேண்டுமென்றால் சிறுமிகளோடு பழகவேண்டும்..’ என்பதில் தீவிரமாக இருந்திருக்கிறான், கணேசன்.

எய்ட்ஸ் கணேசனுக்கு மட்டும்தானா? என்று சந்தேகம் வலுத்துள்ள நிலையில், அவனுடன் சிறையில் இருக்கும்,  சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலுள்ள திருவனும் இரணியவீரனும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த கணேசன், எய்ட்ஸ் குறித்த தவறான புரிதலால் அந்தப் பகுதியில், மேலும் எத்தனை சிறுவர்களிடம் நெருங்கினானோ? இது குறித்தெல்லாம் உடனே விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது  அவசியமாகும். ஏற்கனவே, எச்.ஐ.வி. ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட விவகாரத்தில், சாத்தூர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைகள் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. தற்போது, கணேசன் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. இனியாவது, விழித்துக்கொள்ளுமா விருதுநகர் மாவட்டம்? 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.