Skip to main content

'எம்.எல்.ஏவை காணவில்லை...'- நெல்லையில் பரபரப்பை கொளுத்திய சுவர் அறிவிப்பு!

Published on 26/09/2021 | Edited on 26/09/2021

 

'Missing MLAs ...' - Nellai announcement that ignited a commotion!


 

'வில்லுக்கு விஜயன். சொல்லுக்கு அர்ஜூனன்.
சொன்ன சொல்லைத் தவற மாட்டார் ரூபி.மனோகரன்.
அவரைக் காணவில்லை. கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்'
 -டி.ஐயப்பன்.

 

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி நகரின் பேருந்து நிலையச் சுவரில் எழுதப்பட்ட இந்த வாசங்களும் அறிவிப்பும் நாங்குநேரி வாசிகளின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் பரபரப்பு நெருப்பையும் பற்ற வைத்திருக்கிறது. காரணம் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிற அந்த வாசகங்கள்தான். இந்தப் பக்கமே காணவில்லை என்று சொல்வது தேர்தல் முடிந்து எம்.எல்.ஏ.வாகப் பொறுப்பேற்று ஐந்தே மாதங்களான தொகுதி எம்.எல்.ஏ.வான காங்கிரசின் ரூபி.மனோகரனைத் தான்.

 

'Missing MLAs ...' - Nellai announcement that ignited a commotion!

 

மிகக்குறுகிய காலத்திலேயே இந்த அளவுக்கு மக்களின் விமர்சனத்திற்குள்ளான நிலவரம் பற்றி அறியும் பொருட்டு சுவர் விளம்பர அறிவிப்பு செய்த தொகுதியின் மக்கள்நல ஆர்வலருமான சுப்பிரமணியன், ஐயப்பன் இருவரிடம் பேசிய போது, அவர்களோ, ''மானாவரிப்பகுதியான நாங்குநேரி தொகுதியில் விவசாயம் என்பது வானத்தையும் ஆற்று வழி நீரையும் நம்பிய பகுதி என்றாலும், சுதந்திரமடைந்து இவ்வளவு காலம் போன பின்பும் எந்த ஒரு தொழில் வளமுமில்லாத முன்னேற்றம் காணாத தொகுதியானதற்கு ஆதிமுதல் காரணமே 1989ல் தொகுதி சார்ந்த எம்.எல்.ஏ.வான ஆச்சியூர் மணிக்குப் பின்பு 32 வருட காலமாக எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் முதல் தற்போதைய எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் வரையிலானவர்கள் அனைவரும்  தொகுதி சாராத வெளியூரிலிருந்து இறக்குமதியான வேட்பாளர்களே. ஏனெனில் தொகுதி சார்ந்தவர்கள் எம்.எல்.ஏ.வாக இருந்திருப்பார்களோயானால் ஒரளவிற்கு மக்களின் கஷ்ட நஷ்டம் தெரியும், தொகுதியும் முன்னேற்றப்பாதைக்குப் போயிருக்கும். அதற்கான குடுப்பினை எங்களுக்குக் கிட்டவில்லையே. அதனால் தான் சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

 

தொகுதியின் கண் போன்றும் இருதயமுமான பகுதி நான்குநேரி. நகரம் மற்றும் சுற்றுப்பட்டிலுள்ள கிராமமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் வாழ்வாதாரம், விவசாயம், இன்ன பிற வகைகளுக்காக நாங்குநேரிக்குத்தான் வரவேண்டும். மேலும், தேசிய நெடுஞ்சாலை வேறு நகரின் பக்கமாகவே செல்வது ஒரு அடையாளம் மட்டுமே.

 

மக்களின் நடமாட்டத்தால் வியாபாரமும், பிறதொழில்களும் நாங்குநேரியில் படுபிசியாக நடந்து வந்ததுடன் நகரவாசிகளின் வாழ்வாதாரமும், ஆரோக்யமாகவே இருந்து வந்தது. ஏனெனில் தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பறக்கிற அனைத்து பேருந்துகளுமே நாங்குநேரி ஊருக்குள் வந்து செல்கிற காலம் என்பதால்தான் அத்தனை புழக்கங்களும் ஏற்பட்டதற்கான முக்கிய வகைகளில் ஒன்று.

 

யார் கண்பட்டதோ, வாங்கிய சாபமோ, வரமோ தெரியவில்லை. 1982ன் நகரின் பக்கமாக பைபாஸ் சாலை போடப்பட்டதால், தெற்கேயும் வடக்கேயும் செல்லும் பேருந்துகள் ஊருக்குள் வராமல் நெடுஞ்சாலையிலேயே பறக்கத் தொடங்கிவிட்டன.

 

'Missing MLAs ...' - Nellai announcement that ignited a commotion!

 

1985க்குப் பின் நாங்குநேரி ஊருக்குள் வந்துசெல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து காலப் போக்கில் மிகவும் சுருங்கிவிட்டன. அதுவும் பகல் இரவு என்று நாள் முழுக்க பரபரப்பாக வந்துபோன பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துபோய் விரல் விட்டு எண்ணுகிற அளவுக்கு அக்கம்பக்கக் கிராமங்களுக்காகச் செல்லுகிற நான்கு நகரப் பேருந்துகள் மட்டுமே ஊருக்குள் வந்து செல்லும்படியாகிவிட்டது.

 

ஒருநகரின் முன்னேற்றத்தின் அச்சாணியே போக்குவரத்துதான். இங்கே அந்த அச்சாணியே உடைந்துபோய் விட்டது. போக்குவரத்து இல்லாததால் ஜனப் புழக்கம் ரொம்ப குறைந்துவிட்டது. நகர மற்றும் வெளிப்பகுதி மக்கள் ரொம்ப சிரமப்படுறாக. மட்டுமல்ல நகரின் அனைத்து வியாபாரமும் விவசாய தொழிலும் முடங்கிப் போனதுடன், கடைகள் காற்றுவாங்குகின்ற அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. இதுல குடிதண்ணீர் பிரச்சணை வேற. பேருந்துகளில் நாங்குநேரி செல்ல வேண்டும் என்று வருகிற மக்களைப், பயணிகளை பேருந்துகளில் ஏறுவதற்கு மறுக்கப்படுகிறார்கள். வெறுப்பாக அவர்களைப் பார்க்கிறார்கள். வெறுப்பில் அவர்களை ஏற்றுவதே இல்லை அப்படியே ஏற்றினாலும் ஊருக்குள் வராமல் பைபாஸ் காட்டுப் புறத்திலேயே இறக்கி விடுகிறார்கள். கேட்க நாதியத்துப் போனோம். அங்கிருந்து மக்கள் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் நடந்து ஊர் வரவேண்டும். அதுவே தான் இரவிலும் .பெண் பிள்ளைகளின் கதி என்னவாகும். பயம்வேற. யோசிச்சிப்பாருங்க.

 

அதனால் தான் ஆண்டாண்டு காலம் அனுபவிக்கிற இந்த இம்சைக்கு முடிவுகட்ட பேருந்துகள் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும்ணு ஊரே திரண்டு மறியல், சாலையில் போராட்டம் நடத்தினோம். வழி வழியாய் வந்த எம்.எல்.ஏ.க்கள் கலெக்ட்டர்கள், போக்குவரத்து நிர்வாகம் என்று பலரிடமும் மனுக் கொடுத்தோம் பலனில்லை. கவனிப்பாரில்ல. எம்.எல்.ஏ. ரூபி.மனோகரனிடம் மனு கொடுத்தோம் அவரும் கவனிக்கல்ல. அதனால் தான் ஊர் சார்பா இப்புடி சுவர்ல எழுதுனோம்'' என்றார்கள் வேதனை மண்டிய குரலில்.

 

'Missing MLAs ...' - Nellai announcement that ignited a commotion!

 

இது குறித்து நாம் எம்.எல்.ஏ.வான ரூபி.மனோகரனிடம் பேசியதில்,

 

''நான் எங்கேயும் போகல. ரெண்டு வருஷமா தொகுதியில தான் சுத்திக்கிட்டுவர்றேன். எத்தனையோ நிவாரணங்களைச் செய்திருக்கேன். நகரின் நிலைமைகளை நான் அறிந்தவன்தான். பேருந்து பிரச்சினைக்கு தீர்வு காண நிர்வாகத்துடன் பேசியுள்ளேன். இப்போது ஒடுற பேருந்துகளின் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஊருக்குள் வராமல் அவர்களின் இஷ்டப்படி, அவர்களின் வசதிக்காக மக்களை சாலையில் இறக்கி விட்டு விடுகிறார்கள். நிச்சயம் இதற்கு தீர்வு காண்பேன்'' என்றார்.

 

நாங்குநேரி நகரம் ஒளிருமா. நாலாபக்கமும் அதன் ஒளி படருமா என்ற ஏக்கம் தெறிக்கிறது ஒட்டு மொத்த நகரத்திலும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.