Skip to main content

காணாமல் போன இளம்பெண்; கண்டுபிடித்துத் தரக்கோரி காவல் நிலையம் முற்றுகை

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Missing Girl; Find out and lay siege to the police station

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 19 ந் தேதி திடீரென காணாமல் போன நிலையில் உறவினர், தோழிகள் வீடுகளில் எல்லாம் தேடிய உறவினர்கள் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பெண்ணை காணவில்லை என்று பெற்றோர் புகார் கொடுத்திருந்த நிலையில் ஆலங்குடி போலீசார் அந்த பெண் பயன்படுத்திய செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அவர் யாருக்கெல்லாம் போனில் பேசியுள்ளார் என்ற விபரங்களை சேகரித்து சில குறிப்பிட்ட எண்ணில் உள்ளவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புகார் கொடுத்து சில நாட்களாகியும் இளம்பெண்ணை கண்டுபிடித்துத் தரவில்லை என்று இன்று செவ்வாய்க் கிழமை மாலை ஆலங்குடி காவல் நிலையம் முன்பு திரண்ட இளம்பெண்ணின் உறவினர்கள் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் செல்போன் விபரங்கள் சேகரிக்கப்பட்டு தொடர் விசாரனை நடப்பதால் விரைவில் மீட்கப்படுவார் என்று போலீசார் உறுதி அளித்ததால் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

சார்ந்த செய்திகள்