Skip to main content

'முறையற்ற தொடர்புக்கு இடைஞ்சல்... மிஸ்டுகால் கொலை...'-மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

'Missed call incident... Improper contact...'-Wife's sensational confession!

 

தென்காசி மாவட்டத்தின் சுரண்டைப் பக்கம் உள்ள வென்றிலிங்கபுரத்தின் வைரசாமிக்கும், அதன்பக்கமுள்ள வீரசிகாமணியைச் சேர்ந்த முத்துமாரிக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. தம்பதியிருக்குக் குழந்தை இல்லை. இருவரும் வீரசிகாமணியிலுள்ள பர்னிச்சர் பொருட்களைத் தவணை முறையில் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள்.

 

கடந்த 19ம் தேதி அன்று தம்பதியர் இருவரும் வேலையை முடித்துவிட்டு வீரசிகாமணியின் நடுவக்குறிச்சியின் சமத்துவபுரம் அருகே பைக்கில் வரும்போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று வைரவசாமியைக் கட்டையாலும் கற்களாலும் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்பு அந்தக் கும்பல் முத்துமாரி அணிந்திருந்த 30 கிராம் நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடியது. தகவலின்பேரில் சம்பவ இடம் வந்த சேர்ந்தமரம் போலீசார் வைரவசாமியின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

 

'Missed call incident... Improper contact...'-Wife's sensational confession!

 

இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் எஸ்.ஐ. வேல்பாண்டியன் முத்துமாரியிடம் தீவிரமாக விசாரணை செய்ததில் காதலன் மற்றும் அவரது நண்பர்களுடம் கணவரைத் திட்டமிட்டு கொலை செய்திருப்பதும், அதைமறைக்க நகைக்காகக் கொலை செய்தது போன்று மனைவியே நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

 

மேலும் முத்துமாரி கொடுத்த வாக்குமூலத்தில், நானும் வைரவசாமியும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்ததால் மூன்று ஆண்டுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்தோம். திருமணத்திற்கு முன்பே வாலிபர் இசக்கிமுத்துவையும் காதலித்து வந்தேன். ஆனால் பெற்றோர் கட்டாயத்தின்பேரில் வைரவசாமியைத் திருமணம் செய்துகொண்டேன். இதன்பிறகும் இசக்கிமுத்துவுடன் பழக்கத்தைத் துண்டிக்க மனம் இல்லாததால் தொடர்ந்து அவருடன் பழகினேன். இது எனது கணவருக்குப் பிடிக்கல. அதனால் அடிக்கடி என்னைக் கண்டித்தார். அதனால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

 

அதனால் இசக்கிமுத்து மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் கணவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த நான் வழக்கம் போல் பணி முடிந்து திரும்பும் போது இசக்கி முத்துவிற்கு தகவல்கொடுத்தேன். திட்டப்படி காத்திருந்த அவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு பைக்கில் வந்தபோது வழிமறித்துக் கணவரை அடித்துக் கொலை செய்தனர். நகைக்காகக் கொலை செய்வது போன்று இருந்தால் யாரும் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்று நினைத்தோம். என்னுடைய பதற்றம் காரணமாக போலீசார் விசாரணையில் மறைக்க முடியவில்லை என்றிருக்கிறார்.

 

'Missed call incident... Improper contact...'-Wife's sensational confession!

 

இதன்பின் முத்துமாரியைக் கைதுசெய்த போலீசார் வீரசிகாமணியைச் சேர்ந்த இசக்கிமுத்து, நண்பர்கள், காளிராஜ், அங்குராஜ் ஆகியோர் அங்குள்ள மலைப்பகுதியில் பதுங்கியிருந்தபோது அவர்களைக் கைது செய்தனர்.

 

கைதான இசக்கிமுத்துவோ தான் கொடுத்த வாக்குமூலத்தில், நாங்கள் ஆறு ஆண்டாகக் காதலித்து வந்தோம். ஆனால் முத்துமாரியை அவரது பெற்றோர் வைரவசாமிக்கு திருமணம் முடித்துவிட்டனர். அதன்பிறகும் தொடர்ந்து காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு வைரவசாமி இடையூராக இருந்ததால் அவரைக் கொலை செய்ய திட்டம் போட்டோம். திட்டப்படி அவர்கள் வேலை முடித்துக் கிளம்பியதும் முத்துமாரி எங்களுக்கு மிஸ்டுகால் கொடுத்தார். வழியில் காத்திருந்த நாங்கள் அவர்கள் வருவதையறிந்து அவர்களின் பைக்கை வழிமறித்து வைரவசாமியைக் கட்டையால் தாக்கி கொலை செய்தோம் என்று கூறியதாக தெரிவித்த போலீசார், கைதானவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.