Skip to main content

அமைச்சர் திறந்து வைத்த பிளாஸ்டிக் அரவை மிஷின் ஒருவாரத்திலேயே பழுதானது!

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும், மதுரையைச் சேர்ந்த டபிள்யுடூடபிள்யு  என்ற தொண்டு நிறுவனம் மற்றும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் மூலம் நிதி உதவிபெற்று பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் வகையில் பிளாஸ்டிக் அரவை இயந்திரம் மிஷின்கள் வாங்கப்பட்டது. இந்த மிஷின் 3,50 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் அரவை மிஷினை திண்டுக்கல் மாவட்டத்தில் 30 இடங்களில் வைத்து பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருக்க இருந்தனர்.

 

 The Minister's inaugural Plastic Half Machine repair In One Week!


அதன்அடிப்படையில்தான் முதன்முதலில் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள பஸ்ஸ்டாண்டு, ரயில்வே நிலையம், மாநகராட்சி அலுவலகம் இப்படி ஐந்து இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் வகையில் பிளாஸ்டிக் அரவை மிஷின்களை வைத்தனர்.

இப்படி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் அரவை மிஷினை முதன்முதலாக கடந்த 21ம்தேதி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பஸ் ஸ்டாண்டில் திறந்து வைத்தார். அப்போது ஒருலிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் கேனை அந்த மிஷினில் போட்டால் அந்த கேன் அரைபட்டு துகள்களாக வருவதைகண்டு கலெக்டர் விஜயலட்சுமி உள்பட அதிகாரிகளை பாராட்டி விட்டும் சென்றார்.

 

 The Minister's inaugural Plastic Half Machine repair In One Week!


அதைத்தொடர்ந்து மற்ற இடங்களிலும் பிளாஸ்டிக் அரவை இயந்திரம் மிஷின்களை திறந்தனர். அதனடிப்படை யில் பொதுமக்களும், பிளாஸ்டிக் கேன்களை அந்த மெஷினில் போட்டு சென்று வந்தனர். இந்தநிலையில் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் சீனிவாசன் திறந்து வைத்துவிட்டு சென்ற பிளாஸ்டிக் அரவை மிஷின் திடீரென பழுதாகிவிட்டது. இப்படி ஒரு வாரத்திற்குள்ளேயே மிஷின் பழுதானது அதைகண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனே மெக்கானிக்களை அனுப்பி அந்த மிஷினை பழுதுபார்க்க உத்தரவிட்டனர்.

அந்த மிஷினில் உள்ள மோட்டார் பழுதாகிவிட்டதால் அதற்கு பதில் புதுமோட்டாரை பொருத்தினார்கள்.புதிதாக வாங்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் வகையில் பிளாஸ்டிக் அரைவை மிஷின் ஒருவாரத்திற்க்கு கூட மக்கள் பயன்பாட்டுக்கு வாராமல் பழுதானது என்பதால் எந்த அளவிற்கு தரம்மில்லாத மிஷினை வாங்கி இருக்கிறார்கள் என்ற பேச்சும் மக்கள் மத்தியில் பேசப்பட்டும் வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.