Skip to main content

அவதிப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்த அமைச்சர்!

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

The Minister who met the suffering people in person and issued an order of action

 

தாடிக் கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்துப்பட்டி கிராமத்தில் உள்ள தரைப்பாலம் காற்றாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டது. கேள்விப்பட்டவுடன் விரைந்து வந்து பார்வையிட்ட தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பொதுமக்களுக்கு ஆறுதல் கூறியதோடு 8.5கோடி மதிப்பில் பாலம் கட்ட உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடகனாறு ஆத்தூர் தொகுதியில்  தொடங்கி வேடசந்தூர் வரை செல்கிறது. தற்போது தொடர்மழை காரணமாக குடகனாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

 

ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாங்கரை ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் வருவதால் தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்துப்பட்டி கிராமத்தின் தரைப்பாலம் நேற்று திடீரென துண்டிக்கப்பட்டது. 100 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தென்கரைக்கு வரமுடியாமல் அவதிப்பட்டனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விரைந்து வந்து பாலம் துண்டித்ததைப் பார்வையிட்டதோடு ஆத்துப்பட்டி கிராம மக்களுக்கு ஆறுதல் கூறினார். உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்துப்பட்டியில் பாலம் கட்டுவது தான் முதல் வேலையாக இருக்க வேண்டும் என்று கூறியதோடு அதற்கான நிதி 8.5கோடி மதிப்பில் பாலம் கட்ட உத்தரவிட்டார்.

 

The Minister who met the suffering people in person and issued an order of action

 

மேலும் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கூறிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கரையின் மறுபக்கத்திலிருந்த பொதுமக்களிடம் பேசும் போது, “சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆத்துப்பட்டிக்கு நிரந்தர நியாயவிலை கட்டிடம் கட்டிக்கொடுப்பதோடு உடனடியாக ஆத்துப்பட்டியில் நியாயவிலை கடை செயல்படவும் உத்தரவிட்டார்”. ஆய்வின் போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், மாவட்ட திட்ட இயக்குநர் தினேஷ்குமார், கோட்டாட்சியர் காசிசெல்வி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, உதவிபொறியாளர் தமிழ்செல்வன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் தண்டபாணி, திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, உள்பட அதிகாரிகளும் கட்சிப் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.