Skip to main content

உலக சாதனை நிகழ்த்தப்போகும் அமைச்சர் உதயநிதி!

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

Minister Udhayanidhi stalin will participate world record planting 6 lakh saplings

 

தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதன்முறையாக உதயநிதி கலந்து கொள்கிறார். இந்த விழா ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் மாவட்ட கட்சி பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.

 

Minister Udhayanidhi stalin will participate world record planting 6 lakh saplings

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருவேங்கடநாத பெருமாள், கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 117 ஏக்கர் நிலம் உள்ளது. அதை சரிவர பராமரிக்காததால், அந்த நிலங்கள் முழுவதுமே சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் இத்தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான சக்கரபாணி இத்தொகுதியை பசுமை தொகுதியாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொகுதி முழுவதும் மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறார். அதோடு தொகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் ஊராட்சி மூலம் அகற்ற சொல்லியதுடன் மட்டுமல்லாமல் சீமைக்கருவேலம் இல்லாத ஊராட்சிக்கு ரூ. 10 லட்சம் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அந்தந்த ஊராட்சிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் ஊராட்சிகளில் உள்ள சீமைக்கருவேல முட்களை அகற்றும் பணிகளில் ஊராட்சி தலைவர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

Minister Udhayanidhi stalin will participate world record planting 6 lakh saplings

 

அப்பொழுதுதான் இடையகோட்டை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் சீமைக்கருவேலம் படர்ந்து இருப்பதை கண்டு, அதை சுத்தம் செய்து, மரக்கன்றுகளை நட்டு, ஒரு பசுமை புரட்சியை உருவாக்க வேண்டும் என்று, அமைச்சர் சக்கரபாணி முடிவு செய்து, அதற்கான பணிகளையும் துவக்கி வைத்தார். அதன் அடிப்படையில்தான் கடந்த 2 மாதங்களில் ஒட்டு மொத்த இடங்களையும் ஆயிரக்கணக்கான பேரை வைத்து சுத்தம் செய்து அங்கங்கே  கை மிஷின்கள் மூலம் குழி எடுத்து அதை சீரமைப்பதற்காக தினசரி 3000க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்களை வைத்து சுத்தம் செய்து இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துவிட்டது. அது போல் அமைச்சரின் இந்த முயற்சிக்காக தொகுதியில் உள்ள ஒட்டுமொத்த கட்சி பொறுப்பாளர்களும் உள்ளாட்சி பொறுப்பாளர்களும் ஒட்டு மொத்தமாக களமிறங்கியும் பணிகளை செய்தனர். இதில் மா, வேம்பு, நாவல், இழுவை, அத்தி, புளி, தேக்கு உள்பட 43 வகையான மரக்கன்றுகள் நட உள்ளனர். இந்த மரக்கன்றுகளும் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் இருக்கும் நர்சரிகள் மற்றும் வேளாண்மை கல்லூரிகள் வனத்துறை மூலமாகவும் வாங்கப்பட்டிருக்கிறது.

 

Minister Udhayanidhi stalin will participate world record planting 6 lakh saplings

 

இப்படி வாங்கப்பட்ட 6 லட்சம் மரக்கன்றுகளைத் தான் 6 மணி நேரத்தில் 6 ஆயிரம் பேரை கொண்டு நடவு செய்து உலக கின்னஸ் சாதனை படைக்க போகிறார்கள். ஏற்கனவே 14 மணி நேரத்தில் பல பகுதிகளில் 6 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வெளிநாட்டில் உலக சாதனை படைத் திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இப்படி ஒரே இடத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடுவது முதல் முறையாகும். அதனாலேயே அமைச்சர் சக்கரபாணியின் இந்த செயல் உலக கின்னஸ் சாதனையில் இடம்பெறப் போகிறது. இந்த விழாவுக்காகத்தான் அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி அழைப்பின் பேரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  23 ஆம் தேதி முதன்முதலில் கலந்து கொண்டு 6 லட்சத்து ஒன்றாவது மரக்கன்றை நட்டு உலக சாதனை படைக்க வருகிறார். அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகரில் மிகப் பிரமாண்டமாக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் கலந்துகொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நலிவடைந்த கட்சிக்காரர்கள் 5 ஆயிரம் பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி வழங்க இருக்கிறார். 

 

Minister Udhayanidhi stalin will participate world record planting 6 lakh saplings

 

அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் ஏற்பாட்டில் நகரில் சில பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடப்பட்டிருக்கும் கம்பங்களில் கட்சிக்கொடியை உதயநிதி ஸ்டாலின் ஏற்ற இருக்கிறார். இந்த ஏற்பாடுகளை ஐ.பி.செந்தில்குமார் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். உதயநிதி அமைச்சரான பிறகு முதன்முறையாக திண்டுக்கல்லுக்கு வர இருப்பதால் அவருக்கு மிக பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் இளைஞர் அணியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.