Skip to main content

“அயல்நாட்டில் தவித்த தமிழர்களை மீட்டு வந்த தமிழக அரசு” - அமைச்சர் பெருமிதம்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

Government of Tamil Nadu has rescued the Tamils who were suffering in foreign countrie

 

விழுப்புரத்தில் நேற்று புலம் பெயர் தொழிலாளர் அணி மற்றும் தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் நல அறக்கட்டளை இணைந்து சர்வதேச புலம்பெயர்ந்தோர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசினார். 

 

அதில், “திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் லட்சிய கொள்கை. இரண்டு நாட்களுக்கு முன்பு நம் பள்ளி திட்டத்தை தொடங்கிய முதல்வர் அதற்கான பங்களிப்பாக 5 லட்ச ரூபாய் நிதி வழங்கினார். அந்த வகையில் நானும் எனது ஒரு மாத ஊதியத்தை நமது பள்ளி திட்டத்துக்காக வழங்க முடிவு செய்துள்ளேன். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் இதுவரை 3467 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 36 லட்சம் பயனாளிகளுக்கு அரசு வழங்கியுள்ளது.

 

வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் அறிவிக்கப்பட்ட பிறகு அதில் உறுப்பினராகச் சேர்ந்து வருகிறார்கள். அப்படி சேரும் அனைவரும் போலி ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லக்கூடாது. அப்பாவிகளை ஏமாற்றிய அப்படிப்பட்ட போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி வெளிநாட்டு வேலைக்கு அழைத்துச் சென்று ஏமாற்றிய திருச்சியைச் சேர்ந்த இரண்டு போலி ஏஜெண்டுகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல்துறை மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

வெளி நாடுகளுக்கு வேலைக்குச் சென்று அங்கு சரியான வேலை உணவு இல்லாமல் தவித்து வந்த 1700 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்புடன் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சியில் கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது” எனத் தெரிவித்தார். இவ்விழாவில் இயேசு சபையின் சென்னை மறை மாநில தலைவர் ஜெபமாலை ராஜா, வளர்ச்சி திட்ட இயக்குநர் வசந்த், தமிழ்நாடு வீட்டு வசதி தொழிலாளர் நல அறக்கட்டளை அமைப்பாளர் வளர்மதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.

Next Story

“பள்ளிவாசல், தர்காக்களுக்கு மானியத் தொகை ரூ.10 கோடியாக உயர்வு” - முதல்வர் அறிவிப்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Rs. 10 crore increase in grant to schools, dargahs says CM stalin

சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒன்றிய அமைச்சர் ஒருவர் திராவிட மாடல் தான் பிரிவினையை தூண்டுவதாக கூறியிருக்கிறார். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறுவதைவிட நகைச்சுவை வேறு ஏதும் இருக்க முடியாது. இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்ட இயற்றியது திராவிட மாடல். பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு மேம்பாட்டுக் கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

பள்ளிவாசல், தர்காக்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகையை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டது. உலமா ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு குடும்பம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.5.45 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக அரசு பதவியேற்றதும் முதல்முறையாக மின் மோட்டார் வசதியுடன் கூடிய ஆயிரம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செய்வோருக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது” என்றார்.