Skip to main content

மாவட்டத்தில் அதிக பாதிப்பிற்கு அமைச்சரே காரணம் -முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு!

Published on 05/07/2020 | Edited on 06/07/2020

 

Minister is responsible for much damage in the district - DMK EV Velu MLA

 

கரோனா பரவலைத் தடுக்க, பொதுமக்களைப் பாதுக்காக்க, பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்யப்படும் மருத்துவ உதவிகள் போன்றவற்றைக் கேள்வி எழுப்பி ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர்களைச் சந்தித்து அந்தந்த மாவட்ட தி.மு.க. மா.செக்கள் கேள்வி எழுப்பி மனு தந்து வருகின்றனர். அதன்படி ஜூலை 4ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மா.செவுமான எ.வ.வேலு எம்.எல்.ஏ, வடக்கு மா.செ தரணிவேந்தன், திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரை, முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி எம்.எல்.ஏ. போன்றோர், ஆட்சியர் கந்தசாமியை நேரில் சந்தித்து மனுவை தந்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வேலு, தமிழ்நாட்டில் கடந்த ஜுன் 3 ஆம் தேதி 25,872 பேர் கரோனாவால் பதிக்கப்பட்டவர்கள் இருந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 465 பேர் மட்டுமே பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றுவரை 2,181 பேர் பாதிபடைந்தும், 12 பேர் இறந்தும் உள்ளனர்.

இதனை உணர்ந்து தான் எங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை மூலமாக அரசாங்கத்திற்கு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்து வருகிறார், ஆனால் இந்த அரசாங்கம் அதனைச் செய்யவில்லை.

நமது மாவட்டத்தில் நாளுக்கு நாள் நோய்த் தொற்று பரவிவருகிறது. நம் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டங்களை மிஞ்சுகிற வகையில் நோய்த் தொற்று திருவண்ணாமலையில் அதிவேகமாக பரவுகிறது. ஆரம்பத்தில் பச்சை நிற மண்டல பிரிவில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் இன்று சிகப்பு நிற அபாய மண்டல பிரிவில் உள்ளது.

கரோனாவால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி மருத்துவமனை, ஆரணியில் உள்ள நகராட்சி அலுவலகம், தாலுக்கா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது. அரசு அலுவலகங்களே மூடுகின்ற அளவில் இன்று நோய்த் தொற்று பரவி வருகிறது. இதற்குக் காரணம் தகுந்த முன் ஏற்பாடுகள் எடுத்திருக்க வேண்டும் அப்படி எந்த ஏற்பாடும் செய்ததாகத் தெரியவில்லை. இதற்கெல்லாம் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனும் காரணம். அவரால் தான் இந்த மாவட்டம் கெட்டு குட்டிச்சுவராகி உள்ளது, அவர் செயல்படாததால் இந்த மாவட்டத்தில் கரோனா வேகமாக பரவியுள்ளது.

எங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆலோசனைப்படி, என்னன்ன நடவடிக்கைககள் எடுக்கப்பட்டது என்பது குறித்து கேள்விகள் எழுப்பி மனு தந்துவிட்டு வந்துள்ளோம், பதில் கிடைக்கப்பெற்றதும் தலைமையின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.