Skip to main content

மாவட்டத்தில் அதிக பாதிப்பிற்கு அமைச்சரே காரணம் -முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு!

Published on 05/07/2020 | Edited on 06/07/2020

 

Minister is responsible for much damage in the district - DMK EV Velu MLA

 

கரோனா பரவலைத் தடுக்க, பொதுமக்களைப் பாதுக்காக்க, பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்யப்படும் மருத்துவ உதவிகள் போன்றவற்றைக் கேள்வி எழுப்பி ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர்களைச் சந்தித்து அந்தந்த மாவட்ட தி.மு.க. மா.செக்கள் கேள்வி எழுப்பி மனு தந்து வருகின்றனர். அதன்படி ஜூலை 4ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மா.செவுமான எ.வ.வேலு எம்.எல்.ஏ, வடக்கு மா.செ தரணிவேந்தன், திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரை, முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி எம்.எல்.ஏ. போன்றோர், ஆட்சியர் கந்தசாமியை நேரில் சந்தித்து மனுவை தந்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வேலு, தமிழ்நாட்டில் கடந்த ஜுன் 3 ஆம் தேதி 25,872 பேர் கரோனாவால் பதிக்கப்பட்டவர்கள் இருந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 465 பேர் மட்டுமே பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றுவரை 2,181 பேர் பாதிபடைந்தும், 12 பேர் இறந்தும் உள்ளனர்.

இதனை உணர்ந்து தான் எங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை மூலமாக அரசாங்கத்திற்கு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்து வருகிறார், ஆனால் இந்த அரசாங்கம் அதனைச் செய்யவில்லை.

நமது மாவட்டத்தில் நாளுக்கு நாள் நோய்த் தொற்று பரவிவருகிறது. நம் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டங்களை மிஞ்சுகிற வகையில் நோய்த் தொற்று திருவண்ணாமலையில் அதிவேகமாக பரவுகிறது. ஆரம்பத்தில் பச்சை நிற மண்டல பிரிவில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் இன்று சிகப்பு நிற அபாய மண்டல பிரிவில் உள்ளது.

கரோனாவால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி மருத்துவமனை, ஆரணியில் உள்ள நகராட்சி அலுவலகம், தாலுக்கா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது. அரசு அலுவலகங்களே மூடுகின்ற அளவில் இன்று நோய்த் தொற்று பரவி வருகிறது. இதற்குக் காரணம் தகுந்த முன் ஏற்பாடுகள் எடுத்திருக்க வேண்டும் அப்படி எந்த ஏற்பாடும் செய்ததாகத் தெரியவில்லை. இதற்கெல்லாம் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனும் காரணம். அவரால் தான் இந்த மாவட்டம் கெட்டு குட்டிச்சுவராகி உள்ளது, அவர் செயல்படாததால் இந்த மாவட்டத்தில் கரோனா வேகமாக பரவியுள்ளது.

எங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆலோசனைப்படி, என்னன்ன நடவடிக்கைககள் எடுக்கப்பட்டது என்பது குறித்து கேள்விகள் எழுப்பி மனு தந்துவிட்டு வந்துள்ளோம், பதில் கிடைக்கப்பெற்றதும் தலைமையின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.