Skip to main content

கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்; சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுப்பதாக அமைச்சர் உறுதி!

Published on 04/04/2023 | Edited on 04/04/2023


 

minister periyasamy participated for dindigul pandrimalai hospital stone laying function

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் பன்றிமலையில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட இருக்கும் நவீன மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார். அதன் பின் பன்றிமலை கலையரங்கத்தில் நடைபெற்ற நலத்திட்ட விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவகுருசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் பிரேம்குமார் வரவேற்று பேசினார்.

 

அதனைத் தொடர்ந்து ஆதரவற்ற பெண்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், சுய உதவிக் குழு பெண்களுக்கு கடனுதவி மற்றும் பேய்திரைக்காடு பகுதியில் வசிக்கும் 18 ஆதிவாசி குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிவிட்டு பொதுமக்கள் மத்தியில்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, "கடந்த 12 வருடங்களுக்கு முன்பு மணலூர் மற்றும் ஆடலூர் மலை கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு இலவச கலர் டிவி மற்றும் எரிவாயு அடுப்பு வழங்கிய பின்பு மலை கிராம மக்கள் தங்களுக்கு மருத்துவ வசதி வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் பின்னர் வந்த அதிமுக அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படவில்லை.

 

ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் அரசாக செயல்படும் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை விடுத்த உடன் உடனடியாக பன்றிமலை மற்றும் ஆடலூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் மலைவாழ் மக்களும் பயன்பெறும் வகையில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன மருத்துவமனை வசதி செய்து கொடுத்துள்ளார். இப்பகுதி மக்கள் தங்களுக்கு திருமண மண்டபம் வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக அவர்களுக்கு திருமண மண்டப வசதி செய்து கொடுக்கப்படும். இது தவிர எனது சொந்த செலவில் உயர் சிகிச்சைக்காகவும், முதலுதவிக்காகவும் மலை கிராம மக்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுப்பேன்" என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.