Skip to main content

முதல்வரின் உத்தரவையடுத்து வெலிங்டன் ஏரியைத் திறந்து வைத்த அமைச்சர்!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

Minister opens Wellington Lake by order

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகிலுள்ளது கீழ்ச்செருவாய். இப்பகுதியில் உள்ளது வெலிங்டன் நீர்த்தேக்கம். வெள்ளாற்றிலிருந்து தொழுதூர் அருகே கட்டப்பட்டுள்ளது அணைக்கட்டு. இதன் மூலம்  தண்ணீர் திறந்து விடப்பட்டு வெலிங்டன் ஏரி நிரம்பும். சமீபத்தில் பெய்த மழையில் வெலிங்டன் ஏரி இருபத்தி எட்டு அடி முழு அளவு நீர் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த ஏரியின் மூலம் சுமார் 65க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அவர்களுக்கு சொந்தமான 24 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

 

இதையடுத்து (23.12.2021) இன்று காலை பத்தரை மணி அளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சி.வி. கணேசன் பாசனத்திற்கு ஏரியில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார். அப்போது அவர் பேசும்போது, எமது தொகுதியில் உள்ள 65 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் இதன் மூலம் விவசாயம் செய்து பயன் பெறுவார்கள். தினசரி 200 கன அடி வீதம் சுமார் 120 நாட்களுக்கு அனைத்துப் பகுதிகளுக்கும் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் இந்த ஏரியை தூர்வாரி கரை செப்பனிடுவதற்கு உரிய உத்தரவை பிறப்பிக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

 

Minister opens Wellington Lake by order

 

இந்த ஏரிக்கு நிரந்தர தண்ணீர் வரத்து ஏற்படுத்தும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், கீழ்ச் செருவாய் பகுதி இளநிலை பொறியாளர் சோழராஜன் மற்றும் நீர்த்தேக்க பாசன பகுதியை சேர்ந்த விவசாய சங்க பிரமுகர்கள், திமுக பிரமுகர்கள், விவசாயிகள் உட்பட பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து வெலிங்டன் ஏரி பாசன பிரிவு அலுவலகத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் அறிவிப்பில் அனைத்து பாசன பகுதிகளுக்கு 120 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒரு போக நெல் சாகுபடி செய்வதற்கான உத்தரவாதம் அளித்துள்ளார்.

 

ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசிடமிருந்து தண்ணீர் திறப்பதற்காக பெற்றுள்ள உத்தரவில் மேல்மட்ட கால்வாய் என்று கூறப்படும் பகுதிகளுக்கு 80 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் விடப்படும் கீழ் மட்ட கால்வாய் பகுதிகளுக்கு 120 நாட்களுக்கு தண்ணீர் விடப்படும் என்று பாகுபாட்டுடன் உத்தரவை பெற்றுள்ளனர். 80 நாட்களுக்கு மட்டும் விடப்படும் தண்ணீரை கொண்டு எந்த மாதிரி நெல்லை விளைவிக்க முடியும். குறைந்தபட்சம் நெல்லை நாற்று விட்டு நடவு செய்து அறுவடை செய்ய குறைந்தபட்சம் 110 முதல் 120 நாட்கள் வரை தண்ணீர் தேவை. அப்படி இருக்கும்போது 80 நாட்கள் மட்டும்  தண்ணீர் விட்டால் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசனம் பெற வேண்டிய மேல்மட்ட கால்வாய் பகுதி விவசாயிகள் எந்த பயிரும் செய்ய முடியாது.

 

Minister opens Wellington Lake by order

 

ஏரி தண்ணீர் முழு கொள்ளளவை நிரம்பியுள்ள நிலையில் இப்படி பாகுபாட்டுடன் தண்ணீர் பாசனத்திற்கு திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஏன் என்று கேள்வி கேட்டு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் சோழராஜன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது செயலாளர் பாஸ்கரன் ஒரு மாதத்தில் அனைத்து பகுதிகளுக்கும் 120 நாட்கள் தண்ணீர் விடும் வகையில் மறு உத்தரவைப் பெற்று அதை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். செயற்பொறியாளர் கூறியபடி 120 நாட்களுக்கும் மேல் மட்ட கால்வாய் பகுதிகளுக்கு முழுமையான அளவில் தண்ணீர் விடவில்லை என்றால் கடுமையான போராட்டத்தில் குதிக்கப் போவதாக விவசாயிகள் தெரிவித்து விட்டு கலைந்து சென்றனர். அமைச்சர் தண்ணீர் திறந்து விட்டு சென்ற பிறகு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.