Skip to main content

அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி!

Published on 19/08/2022 | Edited on 20/08/2022

 

jlk

 

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த மாதம் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆப்ரேஷன் செய்தார். அதன்பின் ஒரு வாரம் கூட அவர் சரிவர ஓய்வு எடுக்கவில்லை. உடனே சென்னையில் நடைபெற்ற உலக செஸ் போட்டி துவக்க விழாவுக்கு சென்றார். அதன் பின் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து தொகுதியில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கிவந்ததுடன் மட்டுமல்லாமல் மக்களின் குறைகளையும் கோரிக்கையையும் கேட்டு பூர்த்தி செய்து வந்தார்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. அதைக் கண்டு பதறிப் போன உறவினர்கள் உடனடியாக மதுரையிலுள்ள மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதை தொடர்ந்து  அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்ததின் பெயரில் தற்போது உடல் நலம் குணமடைந்து வருகிறார். இந்த விஷயம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோருக்கு தெரியவே உடனடியாக  ஆஸ்பத்திரியில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து உடல் நலத்தைப் பற்றி விசாரித்துவிட்டு சென்றனர். 

 

அதோடு இந்த விஷயம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரியவே அமைச்சரை பார்க்க மருத்துவமனைக்கு படையெடுத்தனர். ஆனால் அங்குள்ள அமைச்சரின் உறவினர்கள் இங்கு  யாரும் அமைச்சரை பார்க்க  வேண்டாம் வீட்டுக்கு வந்தவுடன் பாருங்கள் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இருந்தாலும் கட்சி பொறுப்பாளர்கள் பலர் ஆஸ்பத்திரியிலே முகாமிட்டு இருக்கிறார்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நேபாளத்தில் நடந்த ஒலிம்பிக்கில் சாதித்த மாணவி; வீட்டிற்கே அழைத்து பாராட்டிய அமைச்சர்

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

Achiever at the Olympics in Nepal; The minister who invited him home and praised him

 

தமிழக முதல்வரின் சிறப்பு திட்டங்களால் கிராமப்புற மாணவர்களும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் அளவிற்கு தகுதிபெற்று வருகிறார்கள் என்று நேபாளத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் எறி பந்து போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவி ரோஸ் மேரியை  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வாழ்த்தினார். 

 

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப்பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தனது இல்லத்தில் ஆத்தூர் தொகுதி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு வழங்கினார். கிராமப்புற சாலைகளை மேம்படுத்த அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அனைத்து கிராமத்திலும் குறிப்பாக ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் சிமெண்ட் சாலைகள் மற்றும் பேவர் பிளாக் கற்கள் சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

 

அப்போது நிலக்கோட்டை ஒன்றியம் மைக்கேல் பாளையத்தை சேர்ந்த ரோஸ்மேரி என்ற மாணவி இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கிடையே நேபாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19,20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு எறிபந்து போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் ஆசி பெற்றார். அப்போது அவரை வாழ்த்தி பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி... “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சிறப்பு திட்டங்களால் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் சிறப்பான முறையில் பயிற்சி பெற்று ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் அளவிற்கு தயாராகி வருகிறார்கள்” என்றார். மேலும், கிராமப்புறத்தில் உள்ள மாணவி ரோஸ்மேரி பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு சிங்கப்பூரில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள நிதியுதவி வழங்கப்படும் என்று கூறினார்.

 

 

Next Story

ஐயப்ப பக்தர்கள் கார் கவிழ்ந்து 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

Ayyappa devotees' car overturned and 8 people lost their lives

 

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உட்பட 10 பேர் ஒரு காரில் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஐயப்ப பக்தர்கள் வந்த கார் குமுளி மலைப்பாதையில் இறங்கிக் கொண்டிருந்தபோது எஸ் வளைவு தாண்டி பென்ஸ்டாக் குழாய் அருகே வரும்போது நிலைத் தடுமாறி 40 அடி பள்ளத்தில் இருந்த பென்ஸ்டாப் குழாயில் தண்ணீர் வரும் மெகா சைஸ் பைப் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது.

 

இந்த விபத்தில் காரில் வந்த சிவகுமார், வினோத், நாகராஜ், கோபாலகிருஷ்ணன், கன்னிச்சாமி, கலைச்செல்வன், தேவதாஸ், முனியாண்டி ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜா, ஹரிஹரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களையும் மேலும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களையும் மீட்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தேனி மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தெரியவர, அவர் உடனே ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மற்றும் ஆட்சியர் முரளிதரன் ஆகியோரை நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கும்படியும், தேவைப்படும் உதவிகளைச் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து, அமைச்சர் ஐ.பெரியசாமி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.