Published on 25/11/2023 | Edited on 25/11/2023

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பகுத்தறிவு சீர்திருத்த செம்மல் கலைஞர் என்ற தலைப்பில், வேலூர் டவுன்ஹால் பகுதியில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் துரைமுருகனிடம், ஆளுநர்கள் பைல்களை கிடப்பில் போடக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இனிமேலாவது ஆளுநர்கள் திருந்தினால் பரவாயில்லை” என்று பதிலளித்தார்.