Skip to main content

இலங்கைத் தமிழர்கள் முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள்!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Minister and officials who provided welfare assistance to the Sri Lankan Tamils camp

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரை ஒட்டியுள்ள பகுதியில் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. அவர்கள் இந்தப் பகுதியில் நீண்டகாலமாக வாழ்ந்துவருகிறார்கள். அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோட்டாட்சியர் ராம்குமார், வட்டாட்சியர் சிவகுமார், செந்தில்குமார் மற்றும் சமூகநல வருவாய்த் துறையினர் முன்னிலையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

அதேபோல், 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் 240 பயனாளிகளுக்கு உடைகள், 97 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் குடும்பத்திற்குத் தேவையான பாத்திரங்கள், 14 ஆயிரம் மதிப்பீட்டில் அப்பகுதி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு எரிவாயு இணைப்பு, சமூக மேம்பாட்டு நிதியாக 75,000 என நான்கு லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கினார். சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு நபருக்கு ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான அரசாணையும் வழங்கினார் அமைச்சர். அப்போது பேசும்போது ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு 200 நாட்களில் செய்துள்ள சாதனைகள் குறித்து பேசினார்.

 

அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே கரோனாவை முழுவதுமாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் தமிழக முதல்வரின் கடும் உழைப்பின் மூலம் கரோனாவை ஒழித்தார். தமிழக மக்களின் நலனுக்காக மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, மகளிருக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் உதவித்தொகை, இப்படி பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதை உடனுக்குடன் செயல்படுத்திவருகிறார். ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும் மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 

இன்னும் இதுபோன்று பல்வேறு வகையான மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்காக முனைப்போடு பாடுபட்டுவருகிறார் தமிழக முதல்வர்” இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளர் தண்டபாணி, மாவட்ட துணைச் செயலாளர் அரங்க பாலகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர்கள் கோவிந்தசாமி, வேல்முருகன், ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் ராமு, இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், பொதுக்குழு உறுப்பினர் குரு சரஸ்வதி, வழக்கறிஞர் அணி சரவணன் உட்பட ஏராளமான திமுக பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.