Skip to main content

லட்சக்கணக்கில் குவிந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்; சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிய வடுவூர் பறவைகள் சரணாலயம்!

Published on 02/11/2020 | Edited on 03/11/2020

 

 Millions of exotic birds; Vaduvoor Bird Sanctuary without tourists!

 

கரோனா காலத்திலும் வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. அதனைக் காண்பதற்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவேண்டும் என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளது வடுவூா் பறவைகள் சரணாலயம். வடுவூர் பறவைகள் சரணாலயத்தை தமிழகத்தின் இரண்டாவது பறவைகள் சரணாலயமாக 1996 -ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அங்கு ஆஸ்திரேலியா, லடாக், திபெத், ஸ்ரீலங்கா, இந்தோனேசியா, சைபிாியா, அந்தமான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 38 வகையான பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை சரணாலயத்திற்கு வருவது வழக்கம் .

தற்போது கரோனா துவங்கிய நாளில் இருந்து இன்றுவரை சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் சரணாலயம் வெறிச்சோடி கானப்படுகிறது. அதேவேளையில் வடுவூா் ஏரியில் இந்த ஆண்டு தண்ணீர் அதிக அளவில் உள்ளதால் பறவைகளின் வரத்து வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.

 

 Millions of exotic birds; Vaduvoor Bird Sanctuary without tourists!


"செங்கால் நாரை, நத்தை குத்தி நாரை, சாம்பல் கூழை கிடா, பின்னல் கொண்டடை திரவி, ஊசி வால் திரவி, உள்ளான், வௌ்ளை அரிவாள் மூக்கன், ஜொலிக்கும் அரிவாள் மூக்கன், அகல வாய் திரவி உள்ளிட்ட 38 வகையான பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன. இனப் பெருக்கத்திற்காக வரும் பறவைகள் சரணாலயத்தில் தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து அவைகள் மீண்டும் சொந்த நாட்டிற்கே திரும்பிவிடும்.

சுமார் 2 இலட்சம் பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றது. இந்த ஆண்டு 3 லட்சம் பறவைகள் கூடுதலாக வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகள் இப்பறவைகளைக் காண்பதற்காக வருவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் வெறிச்சோடிக்கிடக்கிறது. தமிழக அரசு வனத்துறை சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு பறவைகள் சரணாலயத்தைக் காண்பதற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கவேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், அதோடு வடுவூா் சரணாயலம் குறித்து தமிழக அரசு போதிய விளம்பரம் செய்ய வேண்டும்" என்கிறார்கள் உள்ளூர்வாசிகளும் சமூக ஆர்வலர்களும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.