/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/supreme-court_reuters_7.jpg)
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரும் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (26/10/2020) தீர்ப்பளிக்கிறது.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 50% மருத்துவ இடத்தில், 50% ஐ தமிழக ஓபிசி பிரிவினருக்கு தரக்கோரியும், இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தக்கோரியும் தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நாகேஷ்வர ராவ் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இன்று (26/10/2020) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)