Skip to main content

மீ டூ வுக்குத் தடை... ஆண்களுக்கும் ஜீவனாம்சம்... - ஆண்கள் தினத்தில் ஆண்கள் சங்கத்தின் கோரிக்கைகள்

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
association for protection of men-tamilnadu



நவம்பர் 19 ஆண்கள் தினத்தையொட்டி சென்னையில் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் அருள்துமிலன், பொதுச்செயலாளர் மதுசூதனன் உள்பட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
 

அப்போது அவர்கள், 6 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.
 

இந்திய தண்டனைச் சட்டம் 498ஏ (வரதட்சனை தடுப்பு) பிரிவின் கீழ் கைது செய்யப்படும் ஆண்களை மத்திய, மாநில அரசு பணிகளில் இருந்து பணி நீக்கம் செய்யக் கூடாது. பொய்யா தொடுக்கப்படுகின்ற வரதட்சனை புகார்களில் கணவரின் குடும்ப உறுப்பினர்கள் பெயரை குற்றவாளியாக சேர்த்து வழக்கு பதிவு செய்யக்கூடாது.


உச்சநீதிமன்றம் இந்திய தண்டனை சட்டம் 497 (கள்ளத் தொடர்பு)ஐ நீக்கி உத்தரவு பிரப்பித்துள்ளதால் சமுதாயத்தில் கள்ளத் தொடர்பு தவறில்லை எனும் தவறான கருத்து நிலவுகிறது. மேலும் கள்ளத் தொடர்புகளால் சமுதாய சீர்கேடுகளும் அதன் தொடர்ச்சியாக கொலைகளும் அதிகரித்து கொண்டு இருக்கிறது. எனவே மத்திய அரசு வரும் குளிர்கால கூட்டத்தொடரிலேயே கள்ள தொடர்பில் ஈடுபடும் ஆண் - பெண் இருவருக்கும் கடும் தண்டனை வழங்கும் விதமான புதிய சட்டம் இயற்ற வேண்டும். 
 

பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் குற்ற செயலில் ஈடுபடுபவர்களை தண்டிக்க காவல்நிலையம், மகளிர் ஆணையம், சமூக நல அதிகாரி, நீதிமன்றம் என பல்வேறு அமைப்புகள் இருக்கும்போது ஆண்களை பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவும், தொழில் அதிபதிர்களை மிரட்டி பணம் பறிக்கவும் பிரபலங்களை அவமானப்படுத்தவும் பழிவாங்கவும், அரசியல் காரணங்களுக்காகவும் மட்டுமே பயன்படுகின்ற வகையில் இயங்கும் மீ டூ இயக்கத்தை மத்திய அரசு உடனே தடை செய்ய வேண்டும். 
 

தமிழ்நாட்டில் ஆண்டிற்கு சுமார் பத்தாயிரம் திருமணமான ஆண்கள் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை கூறுகிறது. இந்த தற்கொலைகளுக்கு பெரும்பாலும் மனைவி மற்றும் அவர் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் கொடுக்கும் மன அழுத்தமே காரணம். எனவே இதுகுறித்து தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை செய்து தற்கொலை தூண்டுதல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

association for protection of men-tamilnadu


 

விபத்தில் ஊனமுற்ற கணவன்கள், நோய் வாய்ப்பட்டு வேலை செய்ய முடியாத ஆண்கள், திடீர் வேலை வாய்ப்பை இழந்த கணவன்களும் மனைவியிடம் ஜீவானம்சம் கேட்க வகை செய்யும்படி குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125ல் திருத்தம் செய்ய வேண்டும். ஆண்களும் ஜீவனாம்சம் பெறும்படி சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.
 

ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், குறைகளையும் தெரிவித்து தீர்வு காண தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.