தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தொடங்கியது. முதல் நாளான இன்று சிறப்புப் பிரிவு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 30ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 6,999 இடங்களுக்கான கலந்தாய்வு ஒரு வாரத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வுடன் பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வும் தற்போது ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தொடங்கியது
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th-1_23.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th-2_21.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th_19.jpg)