Skip to main content

விஜய் டிவிக்கு தற்கொலை மிரட்டல்; மதுமிதா மீது போலீசில் புகார்

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், அது நிகழ்ச்சிக்கு எதிரானது என்ற  காரணத்தினால் அந்நிகழ்ச்சியில் இருந்து நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில், வெளியே வந்த மதுமிதா மீது விஜய் டிவி சார்பில் சென்னை கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

 

m

 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பேசப்பட்ட தொகையில் பாக்கித்தொகையை உடனடியாக வழங்கவேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று  மதுமிதா, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப் பாளருக்கு வாட்ஸ் -அப் மூலம்  மிரட்டல் விடுப்பதாக அந்த  புகாரில் கூறப்பட்டுள்ளது.   


இது குறித்து நடிகை மதுமிதா, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது பற்றி இதுவரையிலும் எனக்கு தகவல் எதுவும் வரவில்லை. ஆனால்,  என்னை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிக்பாஸ் மதுமிதா காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்!

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

Serious complaint at bigbass Madhumitha police station

 

தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா தபால் மூலம் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில்,  போட்டியாளர்கள் கொடுமைப்படுத்தியதை தொகுப்பாளர் கமலும் கண்டிக்கவில்லை, தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56 வது நாளில் வலுக்கட்டாயமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே அனுப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.