Skip to main content

''தனி நபர்களுக்கு எலி பேஸ்டை விற்க கூடாது''-மா.சுப்பிரமணியன் பேச்சு! 

Published on 12/09/2022 | Edited on 12/09/2022

 

Ma.Subramanian speech!


'தனி நபர்கள் எலி பேஸ்ட்டை வாங்க கடைகளுக்கு வந்தால் விற்கக் கூடாது' என மருந்து கடைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தியின் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சென்னை மேயர், மருத்துவமனை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''வீட்டுக்கு வெளியில் போடக்கூடிய கோலங்களில் கூட அரிசி மாவினால் கோலம் போடப்பட்டது. கோலம் போடுவது என்பது அழகு படுத்துவது என்பதையும் கடந்து எறும்பு போன்ற நுண்ணுயிர்கள் அரிசி கோலத்தில் இருக்கின்ற அரிசி துகள்களை சாப்பிடுவதற்காகவே அந்த கோலம் போடுவது என்பது அந்த காலங்களில் நடைமுறை பழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால் அதுவும் கூட இன்றெல்லாம் மாறி, எல்லாம் செயற்கையாக உள்ளது. இந்த செயற்கை எல்லாம் பெரிய அளவிலான பாதிப்புகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தான் சாணம் என்பதற்கு பதிலாக சாணி பவுடர் என்பதை வாங்கி வீட்டில் வைத்திருப்பது என்பது எல்லா வீடுகளிலும் பழக்கமாகிவிட்ட சூழல் உள்ளது. இந்த சாணி பவுடர் இன்றைக்கு உயிரை போக்குகிற ஒரு மிகப்பெரிய விஷத்தன்மை வாய்ந்தது என்பதாலே இளம் பெண்கள் ஏதாவது ஒரு வகையில் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் பொழுது தங்களுடைய உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று கருதுவோர்கள் உடனடியாக எடுத்து உண்ணுகிற ஒரு நிலை ஏற்படுகிறது. அதனால் தான் அதிக அளவில் இளம் பெண்களின் மரணம் என்பது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

 

அதேபோல்தான் இந்த எலி பேஸ்ட். எலிகளை கொள்வதற்குரிய பாசனம் என்பது தேவையா தேவையில்லையா என்றால் விவசாய பெருமக்களுக்கு அது தேவை என்று கருதப்படுகிறது. ஆனாலும் கூட அது மனிதர்களின் உயிர் கொல்லியாக இருக்கும் பட்சத்தில் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பொதுவாகவே தற்கொலைக்கு முயற்சி செய்பவராக இருந்தாலும் நேராக மருந்துக் கடைக்கு தனியாக சென்றுதான் எலி பேஸ்ட்டை கேட்பார்கள். நண்பர்களோடு கூட்டு சேர்ந்து கொண்டு போய் மருந்து கடையில் இன்றைக்கு நான் எலி பேஸ்ட் வாங்கி நாளை காலை எட்டு மணிக்கு சாப்பிட போகிறேன் என்று யாரையும் அழைத்துச் செல்ல மாட்டார்கள். அதனால் தான் தமிழக அரசின் சார்பில் மிக விரைவில் எலி பேஸ்ட்டை மருந்துக் கடைகளில் தனியாக வாங்குபவர்களுக்கு தரக்கூடாது என்கின்ற உத்தரவை கடைக்காரர்களுக்கு கொடுக்க வேண்டும்.  கடைக்காரர்கள் அதனை சரியாக செய்கிறார்களா என்பதை நம்முடைய துறையின் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறோம்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

'பிரதமர் சொல்வது அதிசயமான ஒன்றாக உள்ளது' - அமைச்சர் மா.சு பேட்டி

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
 'What the Prime Minister is saying is something amazing' - Minister Ma.su interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் கச்சத்தீவு மீட்பு குறித்த மோதல்கள் பாஜகவிற்கு திமுகவிற்கும் இடையே ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதாகவும், அப்பொழுது  முதல்வராக இருந்த கலைஞர் எந்தக் கேள்வி கேட்கவில்லை என பிரதமர் இன்று குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இது குறித்த கேள்விக்கு, ''இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் ஏராளமான முறை அமைச்சர் துரைமுருகன் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு விவகாரம் வரும் போதெல்லாம் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அன்று என்ன நடந்தது; அண்ணா கண்டன கூட்டங்களை நடத்தியது; கலைஞர், இந்திரா காந்தி அம்மையாருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள்; சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இது பற்றி நிறைய விஷயங்களை தெரிவித்துள்ளார். ஆனால் இதை எல்லாம் எதையுமே தெரிந்து கொள்ளாமல் ஒரு பிரதமர் இந்த மாதிரி சொல்லி இருக்கிறார் என்பது ஒரு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருந்தால் இந்த பத்தாண்டு காலம் கச்சத்தீவு மீட்புக்கு நரேந்திர மோடி என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையும் அவர்கள் விலக்கி இருந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.