Skip to main content

மாஸ்டருக்கும் அதே பிரச்சனை.. கதை புகாருடன் எழுத்தாளர் கே.ரங்கதாஸ்!

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

“Master story is mine ..” - K.Rangadas


விஜயின் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் பிரச்சனையோடே வெளிவரும் சூழ்நிலையில், தற்போது பொங்கலுக்கு வெளியாகும் 'மாஸ்டர்' படத்தையும் அந்தப் பரபரப்பு விட்டுவைக்கவில்லை. 

 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை வருகின்ற பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர் படக்குழுவினர். 

master

ஏற்கனவே, படத்தின் டீசரை தீபாவளிக்கு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு, தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கதை என்னுடைய கதை என்று கே.ரங்கதாஸ் என்பவர் குற்றம் சாட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். 

 

‘நினைக்கும் இடத்தில் நான்’ என்ற தலைப்பில் தான் எழுதியுள்ள கதைதான் ‘மாஸ்டர்’ எனும் தலைப்பில் எடுத்துள்ளனர். இக்கதையைத் தென் இந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 2017 ஏப்ரல் 7ஆம் தேதி பதிவு செய்து அதற்கான நகலையும் வைத்துள்ளார். இந்தக் கதை நீட் தேர்வையும், 11ஆம் வகுப்பு தேர்வையும் மையமாகக் கொண்டுள்ளது.
இதில் ஹீரோவுக்கு மகிபாலன், வில்லனுக்கு மகேந்திரன் எனவும் பெயர் சூட்டியுள்ளார். இருவரும் ஒரே கல்லூரில் படித்த நண்பர்கள், இருவரும் எம்.ஏ. படித்துமுடித்து பேராசிரியர் தகுதிக்கான ‘ஸ்லெட்’ தேர்வு எழுதி, அதில் ஹீரோ தேர்ச்சி பெறவே, வில்லன் அதில் தோல்வி அடைகிறார். 

 

வில்லனுக்கு என்று தனியாக ஒரு சொந்தக் கல்லூரி உள்ளது. அதில், பேராசிரியாரக ஹீரோ பணிபுரிந்துவரும் நிலையில், சில பிரச்சனை காரணமாக வில்லன், ஹீரோவை விரட்டிவிடவே, ஆதரவற்ற குழந்தைகளுக்கு வாத்தியாராகப் பயணித்து தனியாக ஒரு நிறுவனத்தை உருவாக்கிச் செயல்படுவதே இக்கதையாக உள்ளது.

 

master

 

இதில் ‘வாத்தி கம்மிங்’ மற்றும் ‘கண்ணபார்த்தாக்கா’ என இரண்டு பாடலும் கதையின் சுட்சிவேஷனை எடுத்துக்காட்டுகிறது. இவை இரண்டும் ஹீரோ, ஹீரோயின் இருவருக்குமானது. இதை அனைத்தையும் அப்படியே அவர்கள் வைத்துள்ளனர் என்று கே.ரங்கதாஸ் குற்றம் சாட்டுகிறார்.


“இது சம்பந்தமாக நான் வழக்குத் தொடுக்கவேண்டும். ஆனால், தென் இந்தியத் திரை சங்கத்திலிருந்து இக்கதை, இங்குதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்லது இல்லை என்று லெட்டர் கொடுத்தால்தான், நான் மேலும் வழக்குப் பதிவு செய்ய முடியும். ஆனால், அதை கொடுக்கவே மறுக்கிறார்கள். கதையைச் சங்கத்தில் பதிவு செய்தவுடனே, அந்தக் கதையை இவர்களே வேறு யாருக்காவது பணத்தை வாங்கிக்கொண்டு கொடுத்துவிடுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக தென் இந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் மனோஜ்குமாரிடம் கேட்டபோது, “இது தொடர்பாக எந்தத் தகவலும் எனக்குத் தெரியவில்லை. நான் சூட்டிங்கில் இருப்பதால் அதனை விசாரித்துத் தகவல் கொடுக்கிறேன்” என்றார்.

 

கதை திருட்டில் 'கத்தி'யைத் தொடர்ந்து 'மாஸ்டர்' படமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஸ்டரை போன்று ‘வாத்தி’க்கு வந்த சிக்கல் - முதல்வரிடம் கோரிக்கை

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

vaathi movie title issue

 

தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமிழில் 'வாத்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாகவம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

 

படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் வருகிற 17 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது. இதனிடையே ஒன் லைஃப் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படத்தில் பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் ஆசிரியராக நடித்துள்ளார்.  

 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லி புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வாத்தி என்ற தலைப்பு ஆசிரியர்களை அவமதிக்கும் சொல்லாக இருக்கிறது. உடனே தலைப்பை மாற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. 

 

இதே போல் விஜய் ஆசிரியராக நடித்து வெளியான 'மாஸ்டர்' படத்திற்கும் தலைப்பு தொடர்பாக பிரச்சனை எழுந்தது. இப்படத்தின் தலைப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு, ‘தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஆங்கிலப் பெயர்களைத் தனது படங்களில் தலைப்பாக வைப்பதன் மர்மம் என்னவோ’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

IT raid on the producer xavier britto house

 

‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். செல்ஃபோன் உதிரி பாக தயாரிப்பு நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

https://www.youtube.com/watch?v=tsybx8EILmw

 

இந்தியாவில் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட செல்ஃபோன் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள செல்ஃபோன் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் நேற்றிலிருந்து (21.12.2021) சோதனை நடத்திவருகின்றனர். தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.