Skip to main content

ஆழ்கடலில் நீந்தும் முகக் கவசங்கள்... நீர்வாழ் உயிரினங்களுக்கு உலை!  

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

Masks for swimming in the deep sea

 

கரோனாவிலிருந்து இருந்து மனித இனத்தின் உயிரைப் பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகள் தற்பொழுது கழிவுகளாக நீர்வாழ் உயிரினங்களுக்கு உலை வைத்துள்ளது.

 

கரோனா பெருந்தொற்று பரவிய ஆரம்பத்திலிருந்து முகக் கவசம் அணிவதும், கைகளை முறையாகக் கழுவுவதும், தனிமனித இடைவெளியும் தான் தீர்வு எனத் தற்போது வரை அரசு சார்பிலும், மருத்துவர்கள் சார்பிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்படி மனிதர்களை கரோனாவிலிருந்து காப்பாற்றிய கவசங்கள் கழிவுகளாக மாறி தற்போது ஆழ்கடலில் குவிந்து நீர்வாழ் உயிரினங்களின் உயிருக்கு வேட்டு வைத்துள்ளது.

 

புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஆழ்கடல் ஸ்கூபா டைவர் அரவிந்த் மற்றும் குழுவினர் வங்கக்கடலில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிக்காகச் சென்றபொழுது மனிதர்கள் பயன்படுத்திய முகக் கவசங்கள் ஆழ்கடலில் மிதப்பதைக் கண்டு அதிர்ந்தனர். அந்தக் குழு அது தொடர்பான காட்சிகளையும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் தேங்கியிருக்கும் முகக் கவசங்களை அகற்றும் பணியிலும் அந்தக் குழுவினர் ஈடுபட்டனர்.

 

முறையாக முகக்கவசம் போன்ற மருத்துவக் கழிவுகளை நீக்காமல் போனதே இதற்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழும்பிவருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.