Skip to main content

19 வயது பெண்ணை மணந்த 44 வயது ஆண்...10வயது மகன்...அதிர்ச்சி சம்பவம்!

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

திருவள்ளூர் அருகே முதல் மனைவி இருக்கும் போதே, கல்லூரி மாணவி ஒருவரை 2 வது திருமணம் செய்த நபரை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகின்றனர். இது பற்றி விசாரித்த போது, திருவள்ளூர் மாவட்டத்தில் புல்லரம்பாக்கம் பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருபவர் சிவமணி. இவருக்கு முதல் திருமணம் நடந்து  12ஆண்டுகளுக்கு மேல் ஆனதாக சொல்லப்படுகிறது. மேலும் முதல் மனைவிக்கும், சிவமணிக்கும் 10வயதில் ஒரு மகன் இருப்பதாக கூறுகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும்  சினேகா என்ற பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் முதலில் நட்பாக பேசியுள்ளனர். 
 

incident



பின்பு நாளடைவில் இவர்களது பழக்கம் மிக நெருக்கமாக பல இடங்களுக்கு தனிமையில் சென்றுள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி சினேகா காணாமல் போயுள்ளார். இதனால் பதறிப்போன சினேகாவின் பெற்றோர் அருகில்உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீஸாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதில், சிவமணிக்கும், சினேகாவிற்கும் ஏற்கனவே தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டு வேளாங்கன்னியில் வசித்து வருவதை கண்டுபிடித்தனர். பின்பு இந்த தகவல் தெரிந்ததும் வேளாங்கண்ணி சென்ற போலீஸார் சிவமணியை கைது விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே திருமணம் ஆன நபருடன் இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

இளம்பெண் கொலை வழக்கு; இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Police caught youth in case of case of young woman

சென்னையிலிருந்து ரமேஷ் மற்றும் அவரது காதலி பவித்ராஸ்ரீ இருவரும் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டு திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது திண்டிவனம் அருகே உள்ள கோனேரி குப்பம் பகுதியில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வழி மறித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்ட மர்ம கும்பல் ரமேஷின் காதலி பவித்ராஸ்ரீயை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.

இதையடுத்து மர்ம நபர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய பவித்ராஸ்ரீ அந்த வழியாக வந்த கார் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்த மர்ம நபர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஒலக்கூர் போலீசார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில்தான் திண்டிவனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில், அந்த மர்ம நபர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில்,  திருநெல்வேலி மாவட்டம் கோழியன் குளம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சந்திர பெருமாள் என்பவரது மகன் 24 வயது உதய பிரகாஷ், மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் தங்கள் சொந்த வேலை காரணமாக சென்னை சென்றிருந்தனர். சம்பவம் நடந்த அன்று சென்னையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கோனேரி குப்பம் அருகே ரமேஷ் அவரது காதலி பவித்ராஸ்ரீயும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்ததை நோட்டமிட்டு அவர்களை வழிமறித்து தாக்கி அவர்களிடமிருந்து செல்போனை பறித்துள்ளனர். ஆனால் பவித்ராஸ்ரீ தனது செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். பின்பு அவரிடம் செல்போனை பறித்து வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து சென்றபோது காரில் அடிப்பட்டு பவித்ராஸ்ரீ உயிரிழந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரிடமும் பறிக்கப்பட்ட செல்போனகள் குறித்து விசாரித்தபோது, விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியாம்புலியூர் ஏரிக்கரையில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறியுள்ளனர். அதனைப் பறிமுதல் செய்வதற்காக இருவரையும் அழைத்துக்கொண்டு காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன், ஏட்டு தீபன் மற்றும் காவலர்கள் சென்றுள்ளனர். அங்கு செல்போனை எடுத்துக் கொடுத்த உதயபிரகாஷ் செல்போனுக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் ஏட்டு தீபன் இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பித்து ஓடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வேறு வழியின்றி உதவி ஆய்வாளர் ஐயப்பன், உதயபிரகாஷின் வலது காலில் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். உடனே சரிந்து விழுந்த அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்கப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் ஏட்டு தீபன் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

Next Story

கணவனின் தொடர் தொல்லை; காலை வெட்டிய மனைவி கைது

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

Continued action by the husband; Arrested wife who decided in anger

 

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தினமும் மது அருந்திவிட்டு கணவன் தகராறு செய்ததால், மனைவி கணவனின் காலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்திற்கு உட்பட்டது எருமாடு கிராமம். இந்த கிராமத்தின் பள்ளியரா எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள் குமரன் - சாரதா தம்பதியினர். இவர்களுக்கு சுஜாதா, சுனிதா, பிரியா, சிவானந்தம் என்ற நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவர் குமரன் தினந்தோறும் மது குடித்துவிட்டு மனைவி சாரதாவிடம் தகராற்றில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

 

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது குடித்துவிட்டு மனைவியிடம் குமரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாரதா, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து கணவனின் காலை வெட்டியுள்ளார். அடுத்த நாள் அதிகாலை பார்த்த பொழுது கணவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். கால் பகுதியில் நரம்பு துண்டிக்கப்பட்டதால் உடலில் இருந்த ரத்தம் அனைத்தும் வெளியேறி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்த நிலையில். சம்பவ இடத்திற்கு வந்த தேவாலா காவல்துறையினர் உயிரிழந்த குமரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, உயிரிழப்புக்கு காரணமான மனைவி சாரதாவை கைது செய்தனர்.