Skip to main content

''திமுக ஆட்சியில்தான் அதிகமான உயிர்கள் காப்பாற்றப்பட்டது'-அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

nn

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு, மதுரை மற்றும் திண்டுக்கல் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவ சங்கங்கள் இணைந்து நடத்திய 30 வயதிற்கு மேற்பட்ட மகளிருக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் துவக்க விழாவிற்கு  மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமை தாங்கினார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் தலைமை தாங்கினார்.

 

இவ்விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். நிகழ்வின் மேடையில் ஐ.பெரியசாமி பேசும்போது, ''வேடசந்தூரில் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவ சங்கங்களின் சார்பில் நடத்தப்படும் 30 வயதிற்கு மேற்பட்ட மகளிர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாமிற்கு பல்லாயிரக்கணக்கான மகளிர்கள்  பரிசோதனை மேற்கொள்ள வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில்  அண்ணா.எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா என எத்தனையோ முதல்வர் இருந்திருக்கிறார்கள். ஆனால்  கலைஞர் ஆட்சியில் தான் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் இதய நோய் மற்றும் பல்வேறு உயிர் காக்கும் நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு அதிக மான உயிர்கள் காப்பாற்றப்பட்டது.  கிராமப் பகுதியில் உள்ள தாய்மார்கள் குறிப்பாக 30 வயதிற்கு மேற்பட்ட மகளிர்கள் மருத்துவரிடம் சென்று மருத்துவ முன் பரிசோதனைகள் செய்வதை  தவிர்த்து வருகிறார்கள். நோய்களின் அறிகுறிகளை முன்பே கண்டறிந்து அவைகளை சரி செய்வது சுலபமாகும்.

 

பெண்களுக்கு முக்கியமாக கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்று நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது. இவைகளை முன்கூட்டியே அறிந்தால் நூறு சதவீதம் குணப்படு தரக்கூடியதாகும்  உடலுக்கு வெளி யில் உள்ள நோய்களை நம்மால் கண்டறிய இயலும், உடலுக்குள் வரும் ஒரு புள்ளியை நாம் கண்டறிவது கடினம். இதுபோன்ற மருத்துவ முகாமில் பங்கேற்று முன் பரிசோதனை செய்யும் பொழுது அவைகளை கண்டறிந்து அதை சீர் செய்வது சுலபமான ஒன்றாகும். அதேபோல் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பது என்பது முக்கியமானதாகும். மருத்துவரிடம் சென்றால் அவை நமக்கு நல்லபடியாக குணமாகும் என்பது நம்பிக்கை வைக்க வேண்டும். முன்கூட்டியே இவைகளை அறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் விலை மதிப்புமிக்க உயிர்களை பாதுகாத்து அவர்கள் சுகமாக வாழ முடியும்.

 

முதலமைச்சர்  மருத்துவத்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 750 கோடி மதிப்பிலான 5465 புதிய வகுப்பறைகளை கட்ட முதல்வர்  நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கூட்டுறவுத் துறையில் இருந்தபோது பல்வேறு மருந்துகள் 20 சதவீதம் வரை குறைந்த விலையில் தரமான மருந்துகள் விற்கப்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் தேவையை நிறைவேற்றி வரும் முதல்வருக்கு நீங்கள் அனைவரும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.