Skip to main content

''மாநாடு டிக்கெட் இலவசம்'' இளைஞர்களைக் குறிவைக்கும் காங்கிரஸ் - வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

'' manaadu tickets are free '' - Youth Congress targeting youth - Video released shocking!

 

அண்மையில் திரைக்கு வந்து நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள படம் 'மாநாடு'. டைம் லூப் கான்செப்டில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சிம்புவின் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் மட்டுமல்லாது வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரமும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இதனால் இளைஞர்கள் மத்தியில் இந்த திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

 

'' manaadu tickets are free '' - Youth Congress targeting youth - Video released shocking!

 

இந்நிலையில் தியேட்டருக்கு வரும் இளைஞர்களிடம் எங்கள் கட்சியில் சேர்ந்தால், எங்களுக்கு வாக்களித்தால் மாநாடு படத்தின் டிக்கெட் இலவசம் என கோவை இளைஞர் காங்கிரஸார் சிலர் தியேட்டர் வாசலில் நின்று படம்பார்க்க வரும் இளைஞர்களிடம் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவை சுந்தராபுரம் அரசன் தியேட்டரில் மாநாடு படம் பார்க்கச் செல்லும் இளைஞர்களை குறிவைக்கும் சிலர் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டையை எடுத்துவந்து  காங்கிரசுக்கு வாக்களித்தால் மாநாடு படத்தின் டிக்கெட் இலவசம் எனக்கூறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வெளியான வீடியோவில், ''தம்பி எத்தனை பேர் இருக்கீங்க'' எனக்கேட்க, ''நாங்க நாலு பேர் இருக்கோம்'' என இளைஞர்கள் சொல்ல, ''சரி வரும்பொழுது ஆதாரும், ஓட்டர் ஐடியும் கொண்டுவாங்க காங்கிரசுக்கு சப்போர்ட் ஒரு ஓட்டு அவ்வளவுதான். நாங்க இங்கையே இருக்கோம்'' என்கிறார். மேலும் ''வேறு நண்பர்கள் இருந்தாலும் அவங்களிடமும் சொல்லுங்க'' எனக் கூறுகின்றனர்.

 

இதுகுறித்து விசாரித்தபோது, அகில இந்திய அளவில் இளைஞர் காங்கிரசுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான ஆன்லைன் தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் 7 தேதியோடு அந்த ஆன்லைன் தேர்தலுக்கான கடைசி நாள் என்பதால் இளைஞர்களைக் கூட்டமாக பிடித்து தேர்தலில் வாக்களிக்க வைக்க முடியாது என்ற நிலையில் இளைஞர்கள் கூடும் தியேட்டரை குறிவைத்துள்ளனர் கோவை  இளைஞர் காங்கிரசில் சிலர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.