Skip to main content

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கோடி ரூபாய் மோசடி செய்தவர் கைது..! 

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

https://www.nakkheeran.in/24-by-7-news/politics/notice-karthi-chidambaram-congress-top-decides

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவரின் மகன் மணிமாறன் (26) என்பவர், கடந்த 31.12.2020 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ்விடம் புகார் ஒன்று கொடுத்தார். 

 

அப்புகாரில், தான் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தபோது அதே பள்ளியில் படித்த சீனியர் மாணவரான வேப்பூர் புது காலனியைச் சேர்ந்த பாலசந்தர் என்பவருடன் நண்பராக பழகி வந்தேன். பின்பு 1.9.2019 அன்று பாலசந்தர் தன்னைச் சந்தித்து, தான் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமையக டிப்போவில் 2016-ம் ஆண்டு முதல் இளநிலை உதவியாளராக வேலை செய்து வருவதாக தெரிவித்தார்.

 

மேற்படி டிப்போவில் அதிக இளநிலை உதவியாளர் காலி பணியிடங்கள் உள்ளதாக ஆசை வார்த்தை கூறியதின் பேரில்தான் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பல தவணைகளாக ரூ.8,00,000த்தை பாலசந்திரனிடம் நேரிலும், அவரது வங்கி கணக்கிலும் செலுத்தினேன். மேலும் தனது சித்தி, விருத்தாசலத்தை சேர்ந்த கண்ணன் மனைவி சிவரஞ்சினியும் ரூ.8,00,000 கொடுத்திருக்கிறார். 

 

பாலசந்திரன், தனக்கு பணிநியமன ஆணை கொடுத்து டிப்போவிற்கு வரவைத்து 13.01.2020 அன்று வேலையில் சேர்த்துவிட்டு வருகை பதிவேடு தயார் செய்து தன்னிடம் கையெழுத்து வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த மனுவில், பின்பு கரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்கு வரவேண்டாம் என பாலசந்திரன் கூறினார். பின்பு ஒரு மாத சம்பளம் ரூ.18,500த்தை அவரது வங்கி கணக்கிலிருந்தே செலுத்தினார். 

 

அதன்பின் சந்தேகமடைந்து டிப்போவில் பாலசந்திரன் கொடுத்த பணி நியமன ஆணையைக் காட்டி விசாரித்தபோது அனைத்தும் போலியானவை என தெரியவந்தது என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

 

இதேபோல், விருத்தாசலத்தைச் சேர்ந்த சபரிநாதன், தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த மகேஷ், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த பாலகுமரன், சிறுபாக்கத்தைச் சேர்ந்த இலக்கியா, சின்னசேலம் மஞ்சுளா பாண்டிச்சேரியைச் சேர்ந்த சத்தியவாணி, சாமுண்டீஸ்வரி, வேப்பூரைச் சேர்ந்த அருண், மங்கலம்பேட்டையைச் சேர்ந்த பாலச்சந்தர், லீனா, பாதுரைச் சேர்ந்த சேதுபதி மற்றும் பெண்ணாடத்தைச் சேர்ந்த சித்தார்த்தன் என 14 நபர்களிடம் மொத்தம் ரூ.1,03,15,000யை பாலச்சந்திரன் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி, போலி பணிநியமன ஆணைகளைக் கொடுத்து மோசடி செய்துவிட்டதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுப்பதுடன், தங்களது பணத்தைப் பெற்று தரும்படியும் குறிப்பிட்டிருந்தார். 

 

அந்த புகாரின் பேரில் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் உத்தரவின்படி, மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கனகேசன் பரிந்துரையின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் துர்கா மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் லூயிஸ்ராஜ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு, வேப்பூர் புதுகாலனியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் பாலச்சந்திரன் (33) என்பவரை வேப்பூரில் கைது செய்ததுடன், பாலச்சந்தர் வீட்டிலிருந்த கணினி, சீல்கள், செல்ஃபோன் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.