Skip to main content

மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம் தொடங்கியது!

Published on 22/12/2018 | Edited on 22/12/2018

 

 Executive Meeting started!

 

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிக்க இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக ஏற்கனவே சுற்றிக்கை விடப்பட்டிருந்த நிலையில்,

 

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தற்போது செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் 18 பேர், நிர்வாக குழு உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உட்பட 24 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்று கூட்டம் நடைபெற்று வருகிறது.

 

இந்த செயற்குழு கூட்டத்தில் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களை எப்படி எதிர்கொள்ளவது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

 

 

 

சார்ந்த செய்திகள்