Skip to main content

கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி கைது!

Published on 20/02/2021 | Edited on 21/02/2021

 

MAIN ACCUSED ARRESTED POLICE THANJAVUR DISTRICT COURT

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சேதுபவாசத்திரம் காவல் சரகம் வெளிவயல் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 170 கிலோ கஞ்சாவுடன், மீன்பிடிப் படகும் பிடிபட்டது. அப்போது படகு உரிமையாளர் கீழத்தோட்டம் குமார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
 

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான மதுரையைச் சேர்ந்த பிரபல கஞ்சா கடத்தல் வியாபாரி, சிலோன் சேகர் என்கிற சேகரை கடந்த நான்கு மாதங்களாக நாகப்பட்டினம் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில் சேகர் சென்னையில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், நேற்று (19/02/2021) துணைக் காவல் கண்காணிப்பாளர் பரத் சீனிவாஸ் மற்றும் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் சென்னை சென்று அவரை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவரை இன்று (20/02/2021) தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திச் சிறையில் அடைத்தனர். 
 

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிலோன் சேகர், ஹெராயின் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
 

கஞ்சா கடத்தல் வியாபாரி சேகரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்ஃபோன் எண்களை ஆராய்ந்த போது, அவருடன் கஞ்சா கடத்தலில் சம்மந்தப்பட்ட முக்கிய நபர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவில் சிறப்புத் தனிப்படையினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; போலீசார் தீவிர விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
woman lost their life in trichy

திருச்சி கீழ தேவதானம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 46. ). இவரது மனைவி நித்யா (வயது 34). இவர் கடந்த ஆறு வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு கடந்த 3 வருடங்களாக தோல்நோய் தொடர்பான பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. இதற்காக நித்யா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையில் விரக்திடைந்த நித்யா சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.