Skip to main content

மதுரை மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவர் கொலை வழக்கு... 13 பேர் விடுதலைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு! 

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

மதுரை மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட 13 பேர் விடுதலை செய்யப்பட்டதன் ஆவணங்களை சமர்ப்பிக்க சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தினை சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து முருகேசன் உட்பட ஏழு பேரை, 1997-ல் ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

 

madurai

 

இந்நிலையில் ஏற்கனவே, அண்ணா பிறந்தநாளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர்.  தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேரை விடுதலை செய்துள்ளனர்.

13 பேரின் விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினவேல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே 7 பேர் கொள்ளப்பட்டுள்ள வழக்கில் 13 பேரின் விடுதலையின் அரசாணையின் நகல் வழங்க உத்தரவிட வேண்டும் என மனு செய்துள்ளார்.

 

madurai


இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது உச்சநீதிமன்றம் விதித்த ஒரு தண்டனை காலத்தை, தமிழக அரசு எளிதாக கையாண்டு குற்றவாளிகளை விடுவித்து இருப்பது கண்டனத்துக்குரியது. மேலும் 13 பேரின் விடுதலை செய்யப்படதன் அரசாணையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் இதேபோல் தர்மபுரியில் பேருந்து எரித்து மூன்று மாணவிகள் இறந்த வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கும் அதிருப்தி தெரிவித்தனர். 

மேலும் மதுரை மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட 13 பேர் விடுதலை செய்யப்பட்டதன் ஆவணங்களை சமர்ப்பித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை நாளை நவம்பர் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்து வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'' பிரதமர் பிறந்தநாளில் மாட்டு வண்டி பந்தயம் தான் நடத்த வேண்டும் என்பதில்லை'' - நீதிமன்றம் கருத்து!   

Published on 13/09/2022 | Edited on 13/09/2022

 

 "It is not necessary to conduct a bullock cart race on the birthday" - the opinion of the court!

 

பிரதமர் மோடி பிறந்தநாளில் மாட்டுவண்டி பந்தயம் நடத்த அனுமதிகோரி தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட எஸ்.பி பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

பிரதமர் மோடியின் பிறந்தநாள் அன்று நெல்லையில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதிகோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது அதில் பாரபட்சம் கட்டக்கூடாது. பிறந்தநாள் விழா என்றால் இனிப்புகள் வழங்கலாம், நலத்திட்ட உதவிகளை வழங்கலாம் மாட்டு வண்டி பந்தயம் தான் நடத்த வேண்டும் என்பதில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து நெல்லை மாவட்ட எஸ்.பி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 

 

 

Next Story

பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை அனுபவித்து வந்த பேரறிவாளன் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

பேரறிவாளன் விடுதலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஏழு பேர் விடுதலைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களை சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்கவில்லை. அதேநேரத்தில் குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல என்பதை அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்' என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் அவரவர்களது இடங்களில் வாயை வெள்ளை துணியால் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்த வேண்டும் என கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளை துணியால் வாயினை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சுமார் 200 மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலும் காங்கிரஸ் கட்சியினர் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.