Skip to main content

இன்று, சென்னையில் குறைந்த கரோனா பாதிப்பு!!... பிற மாவட்டங்களின் பாதிப்பு நிலவரம்!!

Published on 05/07/2020 | Edited on 06/07/2020

 

 Low corona impact in Chennai today !!

 

தமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான்காவது முறையாக கரோனா பாதிப்பு என்பது 4 ஆயிரத்தைக் கடந்து தமிழகத்தில் பதிவாகியுள்ளது. அதேபோல் சென்னையில் இன்று 1,713 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது நாளாக 2 ஆயிரத்திற்குக் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதனால் தமிழகத்தில் மொத்தம் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151 என உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 68 ஆயிரத்து 254 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 43 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 17 பேரும்  கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கரோனா  பாதிப்பில் ஒரே நாளில் 21 பேர் இறந்துள்ளனர்.

வேறு நோய் பாதிப்பில்லாத 3 பேர் இன்று கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இதுவரை 456 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை 1,054 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாகச் செங்கல்பட்டில் 119 பேரும், திருவள்ளூரில் 94 பேரும், காஞ்சிபுரத்தில் 33 பேரும், மதுரையில் 62 பேரும், ராமநாதபுரத்தில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 2,186 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 62, 778 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

 Low corona impact in Chennai today !!


மதுரையில் 315 பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை மாவட்டத்தில்  கரோனாவிற்கு  இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 315 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4,091 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 199 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த பாதிப்பு என்பது 4,789 ஆக அதிகரித்துள்ளது, இதனால் அங்கு மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது 5000-ஐ நெருங்கியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை என்பது 84 ஆக இருக்கிறது. 1,716 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 197 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் சென்னையை அடுத்த செங்கல்பட்டில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை செங்கல்பட்டில் மொத்தம் 6,552 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் 142 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 2,496 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை திருவண்ணாமலையில் 1,050 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 90 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை  1,067 ஆக அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 86 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை என்பது 1,068 ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 146 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்திருக்கிறது. இதுவரை 33 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரத்தில் மொத்தமாக இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,354 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் பரமக்குடியைச் சேர்ந்த ஒருவரும், கமுதி சேர்ந்த ஒருவரும் இறந்துள்ளனர். இதனால் ராமநாதபுரத்தில் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை என்பது அங்கு ஆயிரத்தைக் கடந்துள்ளது. மொத்தமாக இதுவரை 1,051 பேருக்கு  கரோனா இதுவரை அங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 778 பேர் சிக்கியுள்ளனர், 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் மொத்தமாக இதுவரை அங்கு 6  பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு மொத்த பாதிப்பு என்பது 200 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 191 பேருக்கு கரோனா  பாதிப்பு உறுதியான நிலையில் இன்று மேலும் 9 பேருக்கு அங்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூரில் ஒரேநாளில் 179 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  

 

 Low corona impact in Chennai today !!


தமிழகத்தில் சென்னையில் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வந்த நிலையில் தற்போது சென்னையை விட பிற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், சென்னையில் பாதிப்பு குறைவதாகவும் தகவல்கள் வெளியாகியது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது,


 

http://onelink.to/nknapp

 

''சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்து வருவது தற்காலிக வெற்றிதான். பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று சொல்வதை விட அதைத் தடுக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் மதுரை, ராமநாதபுரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்'' என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  


இன்று மட்டும் தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,437 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.