Skip to main content

திருநங்கையோடு காதல், இளைஞரும் திருநங்கையும் தற்கொலை!!! காரைக்காலில் பரபரப்பு

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
Love with transgender; Karaikal incident

 

திருநங்கை ஒருவரை காதலித்த இளைஞரும், திருநங்கையும் ஒரே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காரைக்கால் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இருவருக்கும் இடையே உண்டான பாலினம் மாறிய காதலுக்கு இளைஞரின் வீட்டில் கிளம்பிய எதிர்ப்பே தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

 

சாதி மாறுத்து காதலித்து அந்த காதலுக்கு எதிர்ப்பு உண்டாகி தற்கொலை செய்துகொண்டதையும், ஆணும், பெண்ணும் காதலித்து அவர்களுக்கு யாராவது ஒருவர் வீட்டால் பிரச்சனை உண்டாகும்போது ஒன்று சேரமுடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை கண்டிருக்கிறோம். ஆனால் திருநங்கை ஒருவரை காதலித்த இளைஞனும், திருநங்கையும் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சிகரமாகவே இருக்கிறது, அப்பகுதி மக்களுக்கு.



இது குறித்து விசாரிக்கையில்," காரைக்காலை அடுத்துள்ள  திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் திலீப். இருபத்து ஆறு வயதான இவர் திருநள்ளாறு பகுதியில் உள்ள உஜாலா கம்பெனி ஒன்றில் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார். அதேபோல காரைக்கால் நிரவி பகுதியை சேர்ந்த சிவானி என்கிற திருநங்கையை திலிப் காதலித்திருக்கிறார். கடந்த 6 மாதங்களாக இருவரும் காதலித்துள்ளனர். 

 

Love with transgender; Karaikal incident


இந்தநிலையில் திருநங்கையான சிவானியை திலிப் காதலித்து வருவதை தெரிந்துகொண்ட திலிப்பின் பெற்றோர்களும், உறவினர்களும் கோபத்தோடு எச்சரித்து அவமானப்படுத்தியதாக தெரிகிறது. ஆனாலும் இருவரும் பிரிந்து செல்வதாக இல்லை. சில நாட்கள் கழித்து காரைக்கால் அடுத்துள்ள ஒடுதுறை என்கிற பகுதியில் வாடகை வீடு ஒன்றை எடுத்து அதில் இருவரும் கணவன், மனைவியாகவே வசித்து வந்துள்ளனர். அதோடு திருநங்கை சிவானியை அடிக்கடிவெளியே அழைத்து செல்வதும், பைக்கில் காரைக்காலில் வளம் வருவதையும் வாடிக்கையாகவே கொண்டிருந்திருக்கிறார் திலிப்.

 

இதற்கிடையில் திலிப் வீட்டில்  இந்த காதலுக்கு எதிர்ப்பு வலுத்தபடியே இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிவானி இருவரும் பிரிந்துவிடலாம் என கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

 

 

Love with transgender; Karaikal incident

 

இந்நிலையில் 19 ம் தேதி இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இன்று காலை (20.06.2020) வழக்கமாக வீட்டு கதவு திறக்கப்படாமல் இருக்க வீட்டு உரிமையாளர் நிரவி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு வந்த நிரவி காவலர்கள் பூட்டி இருந்த வீட்டை உடைத்து பார்த்தபோது, சிவானியும், திலிப்பும்  தனி தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. பின்னர் சடலத்தை காரைக்கால் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.



ஒரே வீட்டில் உள்ள தனித்தனி அறையில் இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா, அல்லது கோயம்புத்தூர் பனைமரத்தூரில் இரு திருநங்கைகளால் ஒரு இளைஞனுக்கு நேர்ந்ததுபோல திலீப்பை கொலை செய்துவிட்டு, சிவானி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது போன்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.