Skip to main content

விட்டுப்போன காதலியால் வேறு திருமணம் செய்துவைத்த பெற்றோர்... வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

Love marriage in vilupuram incident

 

காதலியுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ளபோது காதலி வேறு ஒருவருடன் சென்று விட்டதால் பெற்றோர் உறவுக்கார பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்த நிலையில் இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள நாபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன் என்பவரின் மகன் குமரேசன். இவருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 23ஆம் தேதி பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்பாக கடந்த 20ஆம் தேதி மணப்பெண் வேறு ஒரு இளைஞருடன் சென்றுவிட்டதால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார் குமரேசன்.

 

திட்டமிட்டபடி மகனுக்குத் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக குமரேசனின் பெற்றோர் உறவுக்காரப் பெண் ஒருவரை 23 ஆம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லையே என மனமுடைந்த நிலையில் குமரேசன் கடந்த 25 ஆம் தேதி அவர்களுக்குச் சொந்தமான வயலில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் தற்கொலை செய்வதற்கு முன்பாக குமரேசன் தற்கொலை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ''தன்னை காதலித்த பெண் தன்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அவரை மறந்தாலும் பழகிய நினைவுகளை மறக்க முடியவில்லை. நான் பதிவிடும் இந்த வீடியோவை வாட்ஸ் அப் குழுக்களில் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன். காரணம் அப்போதுதான் பெண்கள் இதுபோன்று நேசித்தவர்களை விட்டுச் செல்ல மாட்டார்கள்'' என உருக்கமாகப் பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.