Skip to main content

கலெக்டர் யாரை ஆதரிக்க சொல்கிறாரோ அவரை ஆதரிப்பேன்... கவுன்சிலர் அதிரடி...!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

திருவண்ணாமலை மாவட்டம், ஜம்னாமத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 7 கவுன்சிலர் வார்டுகள். இதில் 3 வார்டுகளில் அதிமுகவும், 2 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் தேமுதிகவும், 1 வார்டில் சுயேட்சையும் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக வெற்றி பெற்றவர் திமுகவில் இணைந்துவிட்டார். அப்படியிருந்தும் அதிமுக, தேமுதிக ஆதரவுடன் 4 கவுன்சிலர்கள் என முன்னிலையில் இருந்தது.

 

local body election issue

 



இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காளி என்கிற கவுன்சிலர், தனக்கு துணைசேர்மன் பதவி வேண்டும் எனக்கேட்டு, அதை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் மறுத்ததால் தலைமறைவாகிவிட்டார். திமுகவினர் தான் கடத்திவிட்டார்கள் என அதிமுக ஜம்னாமத்தூர் ஒ.செ வெள்ளையன் குற்றம்சாட்டினார். இவரது மகள் ஜீவா தான் சேர்மன் கேண்டிடேட் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி 6ந்தேதி காலை ஜம்னாமத்தூர் கோவிலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெற்றி பெற்றவர்கள் பதவி பிரமாணம் செய்துக்கொண்டனர். பதவியேற்புக்கு வந்த கவுன்சிலர் காளியை, வெள்ளையன் ஆட்கள் தாக்க முயன்றனர். அதேநேரத்தில் திமுகவினர் அவரை பாதுகாத்தனர். அவரை போலீஸார் பாதுகாப்பாக பதவியேற்க வைத்து அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

 



இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கவுன்சிலர் காளி தரப்பு, என்னை அதிமுகவும் இழுக்குது, திமுகவும் இழுக்குது. நான் இரண்டு பக்கத்தில் யார் பக்கம் போகனும்கிறதை அமைச்சரும், கலெக்டரும் சொல்லச்சொல்லுங்க கேட்டுக்குறன். மத்தப்படி நான் சுயேட்சை. என் உயிருக்கு பாதுகாப்பில்லை அதனால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதனை காவல்துறையினருக்கும் கோரிக்கையாக எழுதி தந்தார். அதனால் கவுன்சிலர் காளி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திமுக, அதிமுக இரண்டு தரப்பும் விடாமல் காளியிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

வரும் ஜனவரி 11ந்தேதி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குள் காளியை தங்கள் பக்கம் முழுமையாக இழுத்துவிட வேண்டும் என திமுக, அதிமுக இரண்டும் முட்டி மோதிக்கொண்டுள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் குறைவு; ஆட்சியரின் உத்தரவால் பரபரப்பு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Nutrient organizer suspended due to shortage of eggs in student rations

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

பிச்சவாரத்தில் படகு சவாரி ரத்து; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Boat ride canceled in Bichhiwara due to rain

 

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் உள்ள சதுப்பு நில காடுகளுக்கு இடையே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

 

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதி ஆகிய இரு தினங்களுக்கு பிச்சாவரம் படகு இல்லத்தில் பயணிகளுக்கு அனுமதி இல்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். எனவே சுற்றுலாப் பயணிகள் பிச்சவாரத்திற்கு வந்து படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.